Thursday, June 30, 2011

இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை...!



நம்மைச் சுற்றி ஓராயிரம் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன ஆனால் அவற்றின் மூலமும் ஆழமும் நாம் அறிவதே இல்லை. தெளிவான ஆராய்தலுக்குப் பின் நமக்கு கிடைக்கும் செய்திகளோ சுவாரஸ்யமான செய்திகலை அசுவாரஸ்யப்படுத்தி விடும் அசுவாரஸ்யமான செய்திகளை சுவாரஸ்யப்படுதியும் விடும்.

மூலைக்கு மூலை திறக்கப்பட்டிருக்கும் டாஸ்மார்க் எனப்படும் அரசு மதுபானக் கடைகளுக்கும், இலவச அரிசிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். இந்த கட்டுரையை வாசித்து முடிக்கும் போது இப்படி கேட்க மாட்டீர்கள் பாருங்களேன்....!
 



அனைத்து தமிழகத் தமிழர்களின் குடும்பங்களுக்கும் நம்ம அரசாங்கம் மாசம் 20 கிலோ அரிசியை இலவசமா கொடுக்குதே, எம்புட்டு பெரிய விஷயம் இது? ன்னு நம்ம அரசாங்கத்த நெனச்சி அப்பப்ப புல்லரிச்சி போயிடுவேன். இத இப்படியே கொஞ்சமா நிறுத்திக்கிட்டு என்னோட ரெண்டு நண்பர்களை உங்களுக்கு சின்னதா அறிமுகம் பண்றேன். அவங்கள அறிமுகம் செய்யிறதுக்கும், மேல நான் சொன்ன விஷயத்துக்கும் ஒரு முடிச்சி இருக்கு!! அதான்!


ரங்கன் - ராக்கி, இவங்க ரெண்டுபேரும் தாங்க அந்த ஃப்ரெண்ட்ஸ். எந்த மேட்டர்னாலும் ரெண்டு பேருக்கும் ஒத்தே வராது. கடைசில சண்டைல தான் முடியும். ஆனா, ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பிரியாம எங்க போனாலும் சேர்ந்தே போவாங்க. எனக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்களா? ஒன்னியும் கிடையாது. சொல்லப்போனா அவங்களுக்கு என்ன தெரியவே தெரியாது!! ஆனா நான் எப்ப ஃப்ரீயா ஆனாலும் அவங்க எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சிகிட்டு அங்கபோய் அவங்களுக்கு தெரியாம உட்கார்ந்துடுவேன்.

அவங்க பேசுறத கேக்க எனக்கு ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். பொழுது போறதே தெரியாது. நேத்து சாயந்திரமா ரொம்ப போர் அடிக்கவே, நம்ம ராக்கி - ரங்கனை பார்த்துட்டு வரலாம்னு கிளம்பினேன். அவங்க நம்ம ஊரு மெயின் பஜார் அம்மன் கோவில் பக்கத்துல இருக்குற டாஸ்மாக் பின்புறமா இருக்குற ஓப்பன் பார்ல ஒக்காந்து தண்ணி அடிச்சிகிட்டு இருந்தாங்க. இந்த மது வகைகள் வாசம் எல்லாம் எனக்கு பிடிக்காதுன்னாலும்(!) பேச்சு சுவாரஸ்யமா இருக்குமேன்னு அவங்க பக்கத்துல் போயி உட்கார்ந்தேன்.

அப்ப ரங்கன் சொன்னான், மாப்பி.. நாம நாள் தவறாம ஒரு குவாட்டராவது பிராந்தி சாப்ட்டா தாண்டா நம்ம அரசாங்கம் மக்களுக்கு எல்லாம் இலவசமா மாசம் 20 கிலோ அரிசி தரமுடியும் என்று! முதல் ரௌண்டு பாதில இருந்த நம்ம ராக்கிக்கு ஒண்ணுமே புரியல. "நீயும் இப்பத்தானடா ஆரம்பிச்ச அதுக்குள்ள ஏண்டா உளருரே?" ன்னு கேட்டான். நீ இப்படி கேப்பன்னு தெரிஞ்சிதான் முதல் ரவுண்டுலயே பேச்சை ஆரம்பித்தேன் என்றான ரங்கன். மாப்பி எதோ விவரமாத்தான் பேசப்போறான்னு புரிஞ்சிகிட்டு நம்ம ராக்கி, மீதி ரவுண்ட ஒரே இழுப்புல உள்ள தள்ளினான்.

ரங்கனும் அடுத்த ரவுண்ட ஸ்டார்ட் பண்ணிக்கிட்டே ஆரம்பித்தான் கலாட்சேபத்தை!

நம்ம அரசு விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நெல்லை பத்து ரூபாய் ஐம்பது காசுக்கு வாங்குகிறது. அதை வாங்குவதற்கான குடோன் மற்றும் நிர்வாகச் செலவு 50 காசு, அதை மில்லுக்கு கொண்டு செல்ல டிரான்ஸ்போர்ட் 50 காசு. ஆக மில்வரையிலும் ரூபாய் 11.50 ஆகிவிடும். அரவைக் கூலி ஒரு ரூபாய் ஐம்பது காசு, அதை திரும்ப அரசு குடோனுக்கு எடுத்துவர ஐம்பது காசு ஆக 13.50 ஆகிறது.

இன்னுமொரு அதிர்ச்சி... ஒரு கிலோ நெல்லை அரைத்தால் தவிடு, நொய் எல்லாம் போக அரை கிலோ அரிசி தான் தேறும்! அப்படியானால் ரூபாய் 13.50 என்பது அரைகிலோ அரிசிக்கான விலை மட்டுமே.

அப்ப ஒரு கிலோ அரிசியின் விலை 27 ரூபாய் அடக்கம் ஆகிவிடும். அதை திரும்ப ரீடெல் (ரேஷன்) கடைகளுக்கு கொண்டுவர, அந்த அலுவலர்களின் சம்பளம் மற்றும் நிர்வாகச் செலவு எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு கிலோ அரிசியின் அடக்கவிலை 30 ரூபாய் ஆகிவிடும். ஆக தமிழ் நாட்டில் ஒரு குடும்ப அட்டைகு 600 ரூபாய் வரையிலும் மாதாமாதம் இலவசம் (அரிசிக்காக மட்டும்) தரப்படுகின்றது.

இப்பத்தான் நம்ம மேட்டருக்கே வருகிறேன். ஒரு குவாட்டர் 70 ரூபாய் என்றால் அதில் கிட்டத்தட்ட 30 ரூபாய் வரையிலும் அரசுக்கு வரியாகக் கிடைக்கின்றது. அதில் நிர்வாகச் செலவு போக 20 ரூபாய் நிகரமாகக் கிடைத்தால் கூட ஒரு கார்டு அரிசிக்கான விலையை ஈடு செய்ய 30 குவார்ட்டர் விற்க வேண்டும். அதாவது ஒரு குடும்பத்தலைவன் ஒரு மாதம் முழுவதும் ஒரு நாள் தவறாமல் ஒரு குவார்ட்டர் அடித்தால் தான் அவன் குடும்பம் இலவசமாக வாங்கி சாப்பிடும் அரிசி ஜீரணமாகும்!!

அதாவது தமிழ்நாட்டுல 1.85 கோடி குடும்ப அட்டைகள் இருக்கு. அத்தனை கார்டுக்கும் இலவச அரிசி ஒதுக்கப்படுகின்றது. (வாங்கினாலும் வாங்காவிட்டாலும்). ஆக 1.85 கோடி பேர் நாள் தவறாமல் ஒரு குவாட்டர் அடிக்க வேண்டும். எல்லோராலும் தொடர்ந்து எல்லா நாளும் குடிக்க முடியாதுங்கறதுனால, ஒவ்வொருத்தரும் மாதத்துக்கு 15 நாள்ங்கிற வீதம் 3.7 கோடி தமிழக தமிழர்கள் ஒரு குவாட்டர் பிராந்தி சாப்பிட்டால் கணக்கு டேலி ஆகிவிடும்! மக்களுக்கும் இலவசம் தந்த மாதிரி ஆகிவிடும், அரசாங்கத்திற்கும் உதவின மாதிரி ஆகிவிடும்!

ஒரு மனிதன் சுவாசத்தில் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை இழுத்துக் கொண்டு, அவனுக்குத் தேவையான் ஆக்ஸிஜனைக் கொடுப்பதற்கு 20 மரங்கள் வேண்டுமாம். அதே மாதிரிதான் நாமும்! தினமும் ஒரு குவாட்டருக்கு மேல அடிப்பதால இனிமே நம்ம பொண்டாட்டியெல்லாம் குடிச்சிட்டு வீட்ட கவனிக்காம இருக்கோம்னு நாக்குல பல்ல போட்டு பேசிடப்பூடாது என்று நம்ம ராக்கி ஒருவித மந்தகாசப் புன்னகையுடன் கூறினான்.

இவர்கள் பேச்சை மனதில் அசைபோட்டுக் கொண்டே ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன். சாப்பிட்டு படுக்கும் போது, தங்கமணியிடம், ராக்கி - ரங்கன் சம்பாஷணையைக் கூறி, அரசாங்கம் செய்வது சரியா? தவறா? என்ற எனது சந்தேகத்தைக் கேட்டேன். பல சமயங்களில் நம்மைவிட அவர்கள் புத்திசாலித்தனமாக சிந்திப்பதாக எனக்கு ஒரு நம்பிக்கை! துணிகளையெல்லாம் மடித்து வைத்துக் கொண்டே என் மனைவியும் பேச ஆரம்பித்தார்.

ஏங்க, அஞ்சு வருஷம் முன்னாடி, நம்ம வீட்டு தோட்டத்தை சுத்தம் செய்யணும்னா, ஒரு தொழிலாளிக்கு நூறிலிருந்து நூற்றைம்பது ரூபாய் வரையிலும் கூலி தருவோம். ஆனா இன்னக்கி என்னா தற்றோம்? 250 ரூபாய்க்கு குறைவாக யாருமே வேலைக்கு வருவதில்லை. அதுவும் முன்பு செய்ததில் பாதி வேலை தான் செய்கிறார்கள். அதனால் அடுத்த நாளும் செய்யச் சொல்லி மொத்தமாக அதே வேலைக்கு 500 ரூபாய் செலவாகிறது.

ஒரு நாளைக்கு 250 சம்பாதிக்கும் அந்த தொழிலாளியின் அன்றைய செலவு என்ன? 4 நபர்கள் கொண்ட அவன் குடும்பதுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசியை அரசாங்கம் இலவசமாகவே தந்துவிடுகிறது. அன்றைக்கு நல்லமுறையில் குழம்பு வைக்க 25 ரூபாயும் காய்கறி 25 ரூபாயும் அதிகபட்சமாக செலவாகிறது. மற்ற திண்பண்டங்கள் இத்தியாதிகளுக்காக 50 ரூபாய் என்றால் 100 ரூபாயில் அன்றைய சாப்பாட்டுப் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்துவிடுகின்றது. மிச்சம் 150 ரூபாய்.

மாதம் 20 நாட்கள் மட்டுமே அவன் வேலை செய்வதாக வைத்துக் கொண்டாலும் மாதம் 3000 ரூபாய் அவனுக்கு சேமிப்பாகிறது. வருடத்திற்கு 36000 ரூபாய். அதில் இரு குழந்தைகளுக்கான கல்வி மற்றும் மருத்துவ செலவுகள், துணிமணிகள் எல்லாம் முடித்துக் கொள்ளலாம். வருடத்திற்கு 120 நாட்கள் சும்மாயிருக்கின்றானே, அந்த நாட்களில் ஒரு 50 நாட்கள் வேலை செய்தால் கூட தீபாவளி, பண்டிகைகள், பொழுது போக்குகள் அனைத்தையும் சீராகக் கொண்டாடி விடலாம்.

250 ரூபாய் கூலி வாங்கும் ஒரு தொழிலாளி கூட இரண்டு பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்து, மனைவியை குடும்பத் தலைவியாக மட்டுமே வைத்துக் கொண்டு சந்தோஷமான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். அதே தினக்கூலி தொழிலாளி இந்த ராக்கி - ரங்கன் போல் குடித்து விட்டு வெட்டி நியாயங்களும், வியாக்கியானங்களும் பேசிக்கொண்டிருக்காமல், வேறு கெட்ட பழக்கங்கள் இல்லாமலும் இருந்து, தன் முன்னேற்றத்தில் கருத்தாக இருந்தாலே போதும், ஒரு வருடத்திலேயே, பயிற்சி பெற்ற தனித்திறமை தொழிலாளியாக, அதாவது ஒரு டிரைவர், கொத்தனார், பிளம்பர், எலக்ட்ரீஷியன், கம்பி கட்டுதல், வெல்டிங்... இப்படியாக மாறி விட நிச்சயமான வாய்ப்பு இருக்கிறது.

அப்படி ஆகும் பட்சத்தில் அவனுடைய ஒரு நாள் சம்பளமே 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையிலும் என்றாகிறது!

ஒரு ஆவேசம் வந்தவராய் இத்தனையும் பேசி விட்டு கடகடவென்று தண்ணீரைக் குடித்த தங்கமணியை ஒருவித ஆயாசையுடன் பார்த்தேன். எனக்கு அந்த ராக்கி - ரங்கன் சொல்றதும் சரின்னு படுது, தங்கமணி சொல்றதும் சரிதானோன்னு யோசிக்க வைக்குது, என்ன ஒரு மனது எனக்கு? புதுசா நாமளும் ஏதாவது யோசிக்கணுமோ?!

Post Comment

Tuesday, June 28, 2011

தொழில் கல்வி படி - கை (பை) நிறைய காசைப் பிடி!



வருடக் கணக்கில் கல்லூரியில் எதற்கென்றே தெரியாமல் படித்து பிறகு வெளியே வந்து வெளி உலகை தெரிந்து கொள்வதை விட இன்றைய சூழ்நிலையில் எது படித்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற தொலைநோக்குப் பார்வை அவசியம். 5 , 6 லட்சம் கொடுத்து எப்படியாவது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் போய் ஏதாவது ஒரு ஹோட்டலில் சாதாரன சர்வராகத்தான் பணிபுரிவேன் என்று அடம் பிடிப்பவராகத்தான் நம்மில் பெரும்பாலானோர் இருக்கிறோம். இன்றைய சூழ்நிலையில் 'சவுதி/கத்தார்/ஒமன்/குவைத்/துபை' போன்ற நாடுகளுக்கு சம்பாதிக்க வர விரும்புபவர்கள் வெல்டிங் (அல்லது) இன்ஸ்ட்ருமன்டேசன் படித்து சான்றிதழ் பெற்று வந்தால் நல்ல சம்பளம் கிடைக்கும். குறிப்பாக (AWS-American Welding Soceity) வெல்டிங் சம்பந்தமாக படித்து சான்றிதழ் பெற்று வந்தால் குறைந்தது உணவு மற்றும் இருப்பிடம் போக ரூ. 30 முதல் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். 'அமெரிக்கன் வெல்டிங் சொசைட்டி அமெரிக்காவில் இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்'. அதன் கிளை நிறுவனம் சென்னையில் தான் இருக்கிறது. இங்கு பெரும்பாலும் உள்ளவர்கள் அங்கு படித்து வந்தவர்கள் தான். என்னுடைய (வேலூர்) நண்பன் ஒருவன் இது படித்து அங்கு (AWS -சென்னையில்) சான்றிதழ் பெற்று இன்று கத்தாரில் ரூ. 1,20,000 (ஒரு லட்சத்து இருபதாயிரம்) சம்பாதித்து குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறான்.(இது எல்லாம் அவன் சொன்னவை) நம்புவீர்களா??? அது ஒரு கோர்ஸ் தான் அங்கு அல்லது அது சார்ந்த அமைப்பில் சேர்ந்து ஓரிரு வருடம் படிக்க வேண்டும் பாலிடெக்னிக் போலத்தான் செய்முறை பயிற்சியுடன். இது பற்றிய மேலதிக விவரங்களுக்கு தாம் இணைய தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் அதன் சென்னை விலாசம் உட்பட. ஆர்வமுள்ளவர்கள் முயன்றால் நல்ல எதிர்காலம் உள்ளது இன்ஷா அல்லாஹ்.
http://www.aws.org/w/a/certification/inter_contact.html
முகவரி இதோ:-
BETZ Engineering & Technology Zone
49-Vellalar Street
Near St Thomas Mount Railway Station
Chennai-68. Tel: 91-44-65364123/22441234,TeleFax: 91-44-22441234
Email: betzzone@vsnl.net
http://www.betzinternational.com/
Contacts: RG.Ganesan Head-Inspection Services. 9840175179/9962200944, rg_ganesan@yahoo.com
CM.Selvaraj HR & Marketing, 9884021740, cm_selva@yahoo.com
Schedule: Every two months.

Industrial Quality Concepts
IQC Training & Services, Pte, Ltd
Shivani Block -1, Ist Floor
40 East Coast Road, Chennai, India 600041
Telephone: 91-44-42158714/42158715/24451009,
Fax: 91-44-5215-8715
Email: iqc.in.org@vsnl.com
Contacts: Sundaran Baskaran, V. Raghavendran.
Schedule: Every two or three months.

Post Comment

Monday, June 27, 2011

தமிழ்நாடு அரசு கொடுக்கும் இலவச மடிக்கணினியில் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் – முதலமைச்சர் பார்வைக்கு…


தமிழக அரசு பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் இலவசமாக லேப்டாப் (மடிக்கணினி) வழங்க இருக்கிறது, மடிக்கணினி மூலம் பல விதங்களில் மாணவர்கள் தவறான வழிகளில் சென்று விட வாய்ப்பு அதிகம் இதை தடுக்க அரசு கொடுக்க்கும் லேப்டாப்-ல் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றி ஒரு முழுமையான ரிப்போர்ட்.


வருங்கால இந்தியா இளைஞர்களின் கையில் என்பதை யாராலும்  மறுக்க முடியாது. இளைஞர்களை கெடுக்கும் முக்கிய ஆயுதங்களான போதைப்பொருட்கள் மற்றும் ஆபாசம் இந்த இரண்டையும் முழுவதும் தடுக்க முடியாவிட்டாலும் ஓரளவு தடை  செய்வதன் மூலம் பெரும் பாதிப்பை குறைக்க முடியும். தொலைக்காட்சி மூலம்  பெரும்பாலும் ஆபாச நிகழ்ச்சிகள் இந்தியாவில் தெரிவதில்லை என்றாலும் இணையம் வழியாக ஆபாச படம், மற்றும் ஆபாச இணையதளங்கள் பார்ப்பவர்களின் எண்ணிகை பத்து  மடங்காக அதிகரித்துள்ளது. இனி பள்ளி மாணவர்கள் கையிலும் , கல்லூரி மாணவர்கள் கையிலும் மடிக்கணினி கிடைத்தால் எந்த அளவிற்கு மாணவர்களின் அறிவு வளருமோ அதே அளவிற்கு தவறு நடப்பதும் அதிகம், உதாரணமாக நாம் கூகிள் தளத்தில் சென்று  ஏதாவது ஒரு தமிழ் வார்த்தையை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது அது ஆபாச வார்த்தை நமக்கு காட்டுகிறது அதைச் சொடுக்கி அவர்கள் தவறான தளத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகம் அதற்காக இண்டெர்நெட் வேண்டாம் என்றால் அது முட்டாள்தனமான  முடிவாக இருக்கும். இதைத்தடுக்க அரசு கொடுக்கும் மடிக்கணினியில் என்ன மாற்றங்கள் எல்லாம் செய்யலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம்.
* ஆபாச தளங்கள் எக்காரணத்தை கொண்டும் அரசு கொடுக்கும் லேப்டாப்-ல் தெரியக்கூடாது. இதற்காக கணினியுடன் இணைந்த ஆபாசதள தடுப்பு மென்பொருள்   சேர்ந்தே இருக்க வேண்டும்.( Uninstall செய்ய முடியாத வண்ணம் இருக்க வேண்டும்).
* குறிப்பிட்ட ஆபாச வார்த்தைகளை கொடுத்து தேடினால் முடிவு காட்டப்படக்கூடாது.
* MP4 , 3GP போன்ற வீடியோ கோப்புகள் கணினியில் Play செய்ய முடியாத வண்ணம்  இருக்க வேண்டும் அல்லது , இந்த கோப்புகளை  லேப்டாப்-ல் காப்பி செய்தால் உடனடியாக Delete ஆகும்படி இருக்க வேண்டும்.
* சமூக வலைதளங்களான பேஸ்புக் , டிவிட்டர் ,ஆர்குட் போன்ற தளங்களை பயன்படுத்த  முடியாத வண்ணம் இருக்க வேண்டும்.
* வைரஸ் பாதுகாப்பு மென்பொருள் அவ்வப்போது தானாகவே அப்டேட் செய்யும் வண்ணம்   இருக்க வேண்டும்.
* Hacking Software, மற்றும் போலியான மென்பொருட்கள் கணினியில் இன்ஸ்டால்   செய்ய முடியாதபடி இருக்க வேண்டும்.
கூகிள் தளம் இல்லை என்றால் இணையமே இல்லை என்று சொல்லும் நமக்கு சீனா ஒரு முன் உதாரணம் தான், அந்த நாட்டில் இளைஞர்கள் இணையதளம் மூலம் எந்த வழியிலும் தவறாக சென்று விடக்கூடாது என்பதற்காக ஆபாச தளங்களை காட்டியதற்காக  கூகிளுக்கு சீனாவில் இடம் இல்லை, இப்போது இந்த பதிவின் முக்கியத்துவம் நமக்கு தெரிந்திருக்கும்.  அரசு கொடுக்க இருக்கும்  இலவச மடிக்கணினிகளில் இங்கு  குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு அம்சம் இருந்தால் மாணவர்கள் தவறான வழிகளில் செல்வது பெருமளவு குறையும். இந்தப்பதிவு அரசின் கவனத்திற்கு செல்லுமா என்று தெரியவில்லை முடிந்த வரை இந்தப்பதிவை அரசு  அதிகாரிகளிடமும் நம் நண்பர்களிடமும் கொண்டு சேர்ப்பது நம் கடமை.
பாதுகாப்பான கடவுச்சொல் (Password) எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்.
நம் இமெயிலை குறிவைக்கும் புதிய பாப்அப்-ஐ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை
ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க
டிவிட்டரில் நேரடியாக உங்கள் கணக்கை திருட முயற்ச்சி பாதுகாப்பு வழிமுறை

 சிந்தனைக்கு
குற்றம் செய்யக்கூடிய சுழ்நிலையை தவிர்த்தால் பெருமளவு
குற்றங்கள் நடைபெறாமல் இருக்கும்.

Post Comment

Monday, June 20, 2011

செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்



கண்டிப்பாக இந்த தலைமுறையினர் பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்போன்கள் வசதி இன்னும் பிரமாதம் பெரும்பாலானாவர்கள் இந்த செல்போன்களுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது. 
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த செல்போன்களில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இந்த செல்போன்களின் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இந்த செல்போன் கதிர் வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas)  புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விஷயம் நாம் செல்போன் உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.  

இந்த செல்போன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்று சில வழிமுறைகளை கீழே காண்போம்.

  • முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.
  • ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும். 
  • குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

  • உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
  • காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
  • தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும். 
  • நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
  • செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
  • செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
  • செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
  • செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம். 
  • போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.
மேற்கூறிய முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக செல்போன்களின் கதிவீச்சில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

Post Comment

தோலில் பிரச்சினை உள்ளவர்கள் ?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின்
உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு படங்களுடன் தெளிவான விளக்கம் அளிக்க ஒரு தளம் உள்ளது.

பூமியில் ஆத்மா வசிக்க இறைவன் கொடுத்த அழகான வாடகை வீடான இந்த உடலில் தோலில் ஏற்படும் பல விதமான பிரச்சினைகள் பற்றி சரியாகத் தெரியாமல் நாளும் பெருமளவு பணத்தை வீண் செய்து கொண்டிருக்கிறோம். இனி நம் உடலின் தோலில்(Skin) ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைகளையும் படத்துடன் தெளிவான விளக்கம் கொடுக்க ஒரு தளம் உள்ளது.

ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின் உடல் தோலில் ஏற்படும் பலவிதமான வித்தியாசமான பிரச்சினைகள் அனைத்தையும் இத்தளத்தில் இருந்து விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
முதலில் தோன்றும் விண்டோவில் Age and Gender என்பதில் குழந்தையா அல்லது பெரியவர்களா என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து Select Body Location என்பதில் உடலின் எந்த பாகம் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அதைச் சொடுக்கி Go என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.
அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த உடல் பாகத்தின் தோலில் ஏற்படும் பிரச்சினைகள் படங்களுடன் தெளிவாக நமக்கு காட்டப்படும். ஒவ்வொன்றையும் சொடுக்கி அந்த பிரச்சினைகளை மேலும் அறிந்து கொள்ளலாம்.
தோலில் பிரச்சினை உள்ளவர்கள் முதல் தோலில் நோய் வராமால் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவருக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.
தோலில் பிரச்சினை உள்ளவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.

Post Comment

Saturday, June 18, 2011

கல்வி கட்டணத்தை சரிபார்த்துக்கொள்ள தனி தளம்



தனியார் பள்ளிகளுக்கு நீபதிபதி ரவிராஜ் பாண்டியன் கமிட்டி புதிய கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 6,355 பள்ளிகளுக்கு அந்தந்த பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப இந்த கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

ரூ.3 ஆயிரம் முதல் 21 ஆயிரம் வரை கட்டணம் அறிவிக்கப்பட்டது. மறு கட்டணம் நிர்ணயத்தை சில தனியார் பள்ளிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த கட்டணம் போதாது என்று மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்தன.

தனித்தனியாக ஒவ்வொரு பள்ளிகளுக்கும் கட்டணம் குறித்த பட்டியல் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. அந்த பட்டியலை பெற்ற பள்ளிகள் அதன் விவரங்களை மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகையில் ஒட்ட வேண்டும் ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இதனை பின்பற்றவில்லை.

அதனால் மாணவர்களுக்கு வசதியாக கட்டண விவரங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது. 6355 பள்ளிகளுக்கான கட்டண விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளது.http://www.tn.gov.in/ , http://pallikalvi.in/ என்ற அரசின் இணைய தளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Post Comment

Thursday, June 16, 2011

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் நபர்கள் உரிய நிறுவனத்தை சோதிக்க உதவும் மத்திய அரசின் பயனுள்ள தளம்.


பல ஏஜென்சிகள் மூலம் தினமும் பத்திரிகையில் நாம் படிக்கும் செய்தி வெளிநாட்டு வேலை வாய்ப்பு நேரடி முகாம் உடனடியாக செல்ல விருப்பம் உள்ளவர் என்று தொடர்புகொள்ளுங்கள், இப்படி வரும் செய்திகளில் பல நம்பகத்தன்மை இல்லாத நிறுவனங்களாகவே இருக்கிறது, ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து  வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கிறது என்றால் அந்த நிறுவனம் உண்மையானது தானா என்பதை நமக்கு தெரிவுபடுத்த மத்திய அரசின் ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.poeonline.gov.in
கொத்தனார் முதல் மெக்கானிக்கல் என்ஜினியர் வரை , எலக்ட்ரிசன் முதல் கம்ப்யூட்டர் என்ஜியர் வரை அனைவருக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்று வரும் செய்திகளை மட்டுமே நம்பி பல பேர் வெளிநாடுகளுக்கு சென்று கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர், ஒரு நிறுவனம் அல்லது அந்த நிறுவனத்தின் ஏஜென்டிடம் இருந்து விளம்பரம் வரும் போது அந்த நிறுவனம் இந்தியாவில் அனுமதி  பெற்றுள்ள நிறுவனமா என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம், மேலே குறிப்பிட்டு இருக்கும் மத்திய அரசின் தளத்திற்கு சென்று நாம் இடது பக்கம் இருக்கும் RA Information என்பதில் நம் மவுஸ்-ஐ கொண்டு சென்றதும் வரும் Sub menu -வில் நிறுவனத்தின் பெயர் , RC  Number , ஏஜெண்ட் பெயர் என்று மூன்று விதமாக நாம் தேடலாம் , விளம்பரத்தில் அவர்கள் எந்த பெயர் மற்றும் RC Number கொடுத்துள்ளனரோ எதை வைத்து வேண்டுமானாலும் நாம் தேடி அந்த நிறுவனம் உண்மையானது தானா ,  இந்திய அரசின் அனுமதி  பெற்றுள்ளதா என்பதையும் எளிதாக  தெரிந்து கொள்ளலாம் , வெளிநாட்டு வேலைக்கும் செல்ல இருக்கும் நபர்களுக்கு இந்தப்பதிவை  கொண்டு சேர்ப்பது நம் நண்பர்களின் கடமை.

Post Comment

Wednesday, June 15, 2011

உங்கள் வாழ்வு சந்தோசமாக சில வழிமுறைகள்!!

நம்முடையதினசரி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ளும் விதத்தை இந்தக் கட்டுரை மாற்றிவிடும். அப்படி இந்தக் கொள்கையில் என்னதான் இருக்கிறது?உங்களது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில் 10% இயற்கையாக நடப்பவை. மீதி 90% உங்களால் நிச்சயிக்கப்படுபவை.

எப்படி? உண்மையாகவே நமக்கு நடக்கும் சம்பவங்களில் 10% நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. உதாரணமாக: ஓடிக்கொண்டிருக்கும் நம் வாகனம் திடீரெனப் பழுதாகி நின்றுவிடாமலிருக்க நம்மால் ஏதாவது செய்ய முடியுமா? தாமதமாகச் சென்றடையும் விமானத்தாலும், ரயிலாலும், பேருந்தாலும் நம் பயணத்திட்டங்கள் அனைத்துமே சில நேரங்களில் தாறுமாறாகக் குழம்பி விடுகின்றன.

அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா? நாம் ஓட்டிச் செல்லும் வாகனத்தைச் சட்டத்தை மீறி முந்திச் செல்லுகிறார் மற்றொரு ஓட்டுனர். அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?
இந்த 10% இல் நமக்கு எந்த ஆளுமையும் கிடையாது. இதை மாற்ற நம்மால் எதுவும் செய்ய முடியாது. இது நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. மீதியிருக்கும் 90% முற்றிலும் மாறுபட்டது. அந்த 90% ஐ நாம்தான் தீர்மானிக்கிறோம்.

எப்படி? நடக்கும் சம்பவத்தை நாம் எதிர்கொள்ளும் விதத்தில், அந்த மீதி 90% ஐ நாம்தான் தீர்மானிக்கிறோம். டிராபிக் சிக்னலின் சிவப்பு விளக்கை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதனை எதிர் கொள்ளும் விதத்தை நம்மால் மாற்றியமைக்க இயலும். இதன் மூலம் நீங்கள் மற்றவர்களால் முட்டாளாக்கப்படுவதைத் தவிர்த்து விடவும் முடியும்.
சம்பவங்களை எதிர்கொள்ளும் விதத்தை நம்மால் தீர்மானிக்க முடியும்; கட்டுப்படுத்த முடியும்.

இந்த 90/10 கொள்கையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதற்கு இதோ சில வழிமுறைகள்:
யாராவது உங்களைத் தாழ்வாகப் பேசினால் ஈரத்தை முழுதும் உள்வாங்கும் பஞ்சுபோல ஆகி விடாதீர்கள். அவர்களின் வார்த்தைகள் கண்ணாடியின் மீது விழும் தண்ணீர் போல வழிந்து ஓடட்டும். உங்களுக்கு எதிரான எந்த வார்த்தையும் உங்களைப் பாதிக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சரியானபடி அதனை எதிர் கொண்டால் உங்களின் நாள் இனிய நாளாக அமையும். தவறான எதிர்கொள்ளலால் நீங்கள், நல்ல ஒரு நண்பரை இழக்கலாம் ; உங்களின் வேலையை இழக்கலாம்; மன அழுத்தத்திற்கும் ஆளாகலாம்.

உங்கள் வாகனத்தை ஒருவர், சாலை விதிகளை மீறி தவறான ரீதியில் முந்திச் சென்றால் நீங்கள் எவ்வாறு எதிர் கொள்வீர்கள்? பொறுமையை இழந்து கடுகடுப்பாகி விடுவீர்களா?
உங்கள் வாகனத்தின் ஸ்டீரிங்கை கோபத்தால் குத்துவீர்களா? ( ஒரு நண்பர் குத்தியதில் ஸ்டீரிங் கழன்று விட்டது!) திட்டித் தீர்ப்பீர்களா? உங்களின் ரத்த அழுத்தம் எகிறுகிறதா?
முந்திச் சென்றவரின் வாகனத்தின் மீது மோத முயல்வீர்களா?

பத்து வினாடி தாமதமாகச் சென்று சேர்ந்தால் யாராவது உங்களைக் குற்றம் கூறப் போகிறார்களா? உங்களின் நிதானமான வாகன ஓட்டத்தை மற்றவர்கள் கெடுக்க ஏன் அனுமதிக்க வேண்டும்?. 90/10 கொள்கையை நினை விற் கொண்டு, அது பற்றிய சஞ்சலத்திலிருந்து விடுபடுங்கள். உங்களை வேலையிலிருந்து விலக்கி விட்டார்கள் என்ற தகவல் தங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.அதனால் ஏன் சஞ்சலமடைய வேண்டும்? ஏன் தூக்கத்தை இழக்க வேண்டும்?. மன வேதனைக்காகச் செலவிடும் சக்தியை வேலை தேடுவதற்காகச் செலவிடுங்கள். கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. அதன் காரணமாக அன்றைக்குச் செயல்படுத்த வகுத்திருந்த உங்கள் திட்டங்களெல்லாம் பாழாகப் போய் விடுகின்றன.
அதற்காக விமானப் பணிப்பெண் மீது ஏன் எரிந்து விழ வேண்டும்?. விமானம் புறப்படுவதற்கும் பணிப்பெண்ணுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தத் தாமத நேரத்தைப் புத்தகம் படிப்பதிலோ, அருகிலிருக்கும் பயணியுடன் நல்ல கருத்துகளைப் பரிமாறுவதிலோ செலவிடுங்கள். நாமே ஏன் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? அது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும்.

90/10 கொள்கை பற்றி இப்போது தெளிவாகப் புரிந்திருக்குமே! இந்தக் கொள்கைக்குச் செயல் வடிவம் கொடுத்துப் பாருங்கள். அதன் பின் விளைவுகள் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு வியப்பாக இருக்கும்! இதனைப் பயன்படுத்துவதால் நீங்கள் எதையும் இழக்கப் போவதில்லை. 90/10 கொள்கையின் விளைவுகள் வியப்பானவை!

மிகச் சிலர்தான் இக்கொள்கை பற்றி அறிந்து, அதனை உபயோகித்துப் பார்க்கிறார்கள்.
கோடிக்கணக்கானோர் தேவையில்லாத மன அழுத்தத்தாலும், சோதனைகளாலும், பிரச்சனைகளாலும், மனவேதனைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் 90/10 கொள்கையைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டும். அது உங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும். நம் வாழ்க்கையை நாம் அனுபவித்து மகிழ்வோமாக!

Post Comment

Monday, June 13, 2011

கடன்.. ஒரு விழிப்புணர்வு பார்வை!


 கடன் வாங்காமல் இப்போதுள்ள சூழ்நிலையில் வாழ்க்கையை நகர்த்துதல் என்பது குதிரைக் கொம்பான விசயம்தான். காலமும், சூழலும், விலைவாசி ஏற்றமும் சேர்ந்து மனிதர்களை ஒரு நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கியிருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. கடன் வாங்கும் போதே அதை திருப்பிச் செலுத்துவதற்கான திட்டமும் மனிதர்களுக்கு இருக்குமெனில் சூழ்நிலைகளை சிக்கலின்றி சமாளித்தல் மிகவும் எளிது.

கடன் வாங்குதல், மற்றும் கொடுத்தல் பற்றிய நிறைய விழிப்புணர்வு கட்டுரைகளை நாம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். அதன் முதல் படியாக இந்த கட்டுரையை உங்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறோம்.






தன் தகுதிக்கு மீறிய… அதே சமயத்தில், அத்தியாவசியத் தேவையன்றி, அதிக வட்டிக்கு, அவசரத்திற்குப் பணம் வாங்குதல், ஆபத்தையே விளைவிக்கும் என்பதற்கு, அன்றாட தினசரிகளில் வரும், ”கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை” போன்ற செய்திகளே போதும் இதனை விளக்குவதற்கு. பெரும்பாலும் அண்டை மாநிலங்களில் இருந்தே வருகிறார்கள் இந்த மாதிரியான கடன் கொடுக்கும் மைக்ரோஃபைனான்ஸ் கம்பெனி முதலாளிகள். இவர்கள் குறிவைத்து செயல்படும் நபர்கள் பெரும்பாலும் சிறுவியாபாரிகளும், கிரமங்களில் இயங்கும் ஒரு சில மகளிர் குழுக்களும், ஆட்டோ டிரைவர்கள் போன்ற எளிய மக்களே…

இவர்கள் கடன் கொடுக்கும் விதமும் அதை வசூலிக்கும் முறையும் மிகவும் கறாராக இருக்கும். ஆனால், அதே சமயத்தில் கடன் கொடுப்பதற்கு முன்பு, இந்த கம்பெனிகளின் கீழ் வேலை பார்க்கும் ஃபீல்ட் ஆஃபிஸர்கள் எனப்படும் இந்த நபர்கள், நம்மவர்களை அணுகும் முறையே வித்தியாசமாக இருக்கும். மிகவும் அன்பாகவும், நம்மவர்களின் வாழ்கை சிறப்பதற்கே இவர்கள் அவதாரம் எடுத்தவர்கள் போன்றும்  பேசி மயக்குவார்கள்.

பெரும்பாலும் இவர்களின் டார்கெட்டாய் இருப்பது, வட்டி விகிதத்தை சரியாக புரிந்து கொள்ளாதவர்களும், எவ்வளவு கட்ட வேண்டும் என சரிவர கணக்கிடத் தெரியாதவர்களும், வங்கிக் கணக்கு முறைகள் பற்றி அதிகம் தெரியாதவர்களுமாகவே இருப்பர்.

சரி, இப்பொழுது இவர்கள் கடன் வழங்கும் முறையைப் பார்ப்போம். கடன் கொடுக்கும் போதே 10 முதல் 20 சதவிகிதம் வரை பிடித்துக் கொள்வார்கள். அத்தோடு மட்டுமில்லாமல் processing fees, insurance, field officers commission  என்று பல்வேறு காரணங்களைக் கூறி, அதற்கும் ஒரு கணிசமான தொகையைப் பிடித்துக் கொள்வார்கள். இவ்வளவோடு விடுவார்களா, என பார்த்தால் இல்லை, கடன் கேட்கும் நபர் இதுவரை வங்கிக் கணக்கு வைத்திருக்கவில்லையெனில், இவர்கள் கை காட்டும் வங்கியில் புதிதாக வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். அதோடு 12/24 வெற்றுக் காசோலைகளிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுக்க வேண்டும்.

மாதமாதம் வந்து கறாராக கடனை வசூலித்து விட்டு செல்வார்கள். ஒருவேளை கடன் வாங்கிய நபர் கொடுக்கத் தவறும் பட்சத்தில், அவர்கள் ஏற்கனவே வசூலித்த அந்த வெற்றுக் காசோலைகளை, இவர்கள் கட்ட வேண்டிய அந்த குறிப்பிட்ட தொகையை நிரப்பி, சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பி விடுவார்கள். அங்கேயும் எப்படி நம்மவர்களின் கணக்கில் பணம் இருக்கும்?. இருந்தால் தான் இவர்கள் கேட்கும் போதே கட்டியிருக்கலாமே… ஸோ, அந்த கம்பெனி இவர்கள் பேரில் வாங்கிக் கொண்ட காசோலையும் பவுன்ஸ் ஆகிவிடுவதோடு மட்டுமில்லாமல், அபராதத் தொகையோடு நம் வீடு நோக்கித் திரும்பி வரும். சமயத்தில் இந்த வகையில் கடன் கொடுக்கும் முதலாளிகளுக்கு அடியாட்களும் இருப்பர். எனவே இவர்களைப் பற்றி வெளியே எங்கும் போய் சொல்ல முடியாது. வெற்றுக் காசோலை மிரட்டலும், அடியாட்கள் மிரட்டலும் சேர்ந்து கடன் வாங்கியவரின் கழுத்தை நெறித்து விடும்.

எனவே எனதருமை மக்களே, இதைப் போன்ற நபர்களிடம் கடன் வாங்குவதற்கு முன்பாக சிந்தியுங்கள் இது அத்தியாவசியம் தானா என்று. அவசரத்திற்காக என்று கடன் வாங்கி விட்டு பெரும் அவதிக்கு உள்ளாகாதீர்கள்.

இதற்காக தகுந்த ஆலோசகர்களையும், அதிகாரிகளையும் அணுகிக் கேட்ட போது, அவர்களின் மீது புகார் மனு ஒன்றை எழுதிக் கொடுங்கள், தக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், பெரும்பாலும் இத்தகையவர்களிடம் சென்று கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே இவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

முறைகேடு செய்பவர்களைப் பற்றி வெளிச்சம் காட்டி சொல்லும் அதே வேளையில், மக்களே… ”சேமிப்பு” என்னும் வார்த்தையைத் தாரக மந்திரமாகக் கொள்ளுங்கள். அது 10 ரூபாயாகவே இருப்பினும், சேமிக்க வேண்டும் என்ற ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள், என்பதையும் சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம். இதனோடு சரியான திட்டமிடுதலும் அவசியமாகிறது.

நம் முன்னோர்கள், நாம் சிறுபிள்ளையாய் இருக்கும் போது, ஒரு சிறிய உண்டியல் ஒன்றை வாங்கிக் கொடுத்து சேமிக்க கற்றுக் கொடுப்பார்கள். அதில் உள்ளது சூட்சுமம். ஏன் பெரியவர்களாய் ஆனதும் நாம் சேமிப்பை மறந்து விடுகிறோம்? குறைந்த வருமானமே உடையவராயினும், ஆரம்பத்திலிருந்தே சிறிது அளவேனும் சேமிக்க வேண்டும். சிறுதுளி பெரு வெள்ளமென அந்த தொகை ஒரு நாள் உங்களுக்கு உதவிடும். அதிக கடன் இன்றி, வாழும் நிம்மதியே சிறந்த  செல்வம். சேமிப்பு என்பதும் ஒருவகையான ஒழுக்கமே. நாம் நம் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும், குறைந்த பட்சம் அவர்களுக்கு கடன் சுமையைக் கொடுக்காதவாறு பார்த்துக் கொள்வோம். சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, அநாவசியமாய், அதிக வட்டிக்குக் கடன் வாங்கும் பழக்கதை ஒழித்து, கடனின்றி மன சாந்தியுடன் வாழ்வோம்.

Post Comment

Wednesday, June 8, 2011

இதய நோய் (ஹார்ட் அட்டாக்) ஒரு பார்வை ?


ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, 
அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.



இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட் பழக்கமுள்ளவங்க, உடல் பருமனானவங்க, மொனோபாஸ் கடந்தவங்க, எப்போதும் டென்ஷனா இருக்கிறவங்க, எந்த வேலையும் செய்யாம உடல் இயக்கமே இல்லாதவங்க, ஏற்கனவே குடும்பத்துல யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவங்க, இவங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது.

இதய நோய்க்கான அறிகுறி நெஞ்சு வலியாதான் இருக்கணும்ணு அவசியமில்லை. அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், பார்வைத் தடுமாற்றம், ஞாபகமறதி, மூச்சு விடறதால சிரமம், தோள்பட்டை வலி. இதுல எது இருந்தாலும், அது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்னு உடனே டாக்டரை பார்க்கிறது அவசியம். சிகிச்சை, உடற்பயிற்சி, இது எல்லாத்தையும் விட முக்கியம் உணவு. அமெரிக்கால எல்லா உணவுகள்லயும் 'டிரான்ஸ்ஃபேட்'னு சொல்லப்படற அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு இருக்காங்கிறதை பேக்கிங் லேபிள்ல போடணும்னு சட்டம் இருக்கு. நம்மூர்ல அப்படி எதுவும் இல்லாதது பெரிய குறை.

எதை சாப்பிடலாம், எது கூடாதுங்கிற விழிப்புணர்வு இல்லாம, கண்டதையும் சாப்பிட்டு நோய்களை விலை கொடுத்து வரவழைச்சுக்கறோம். சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டியது ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், சில வகை உணவுகளை சமைக்கிறபோதே, சத்துகள் ஆக்சிஜனோட சேர்ந்து ஆவியாகி வெளியேறிவிடும். அதைத் தடுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம். கிரீன் டீ, பழங்கள், காய்கறிகள்ல இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமா இருக்கு. உடம்புல கொழுப்பு அதிகமா இருக்கிறப்ப, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தங்காது. கூடவே நச்சுப் பொருளும் சேர்ந்து உண்டாக்கிற கோளாறுகள்ல இதய நோயும் ஒன்று. காய்கறிகளும் பழங்களும் எல்லாருக்கும் அவசியம்னு சொல்ல இது இன்னொரு காரணம்.

இதயம் பலவீனமானவங்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:

* மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும்.

* ஒரு முட்டைல 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருக்கிறதால, அது கூடவே கூடாது.

* பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்ல அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள்  அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.

* 'ஊறுகாயும் அப்பளமும் இருந்தா போதும், வேற எதுவும் வேணாம்'னு சாப்பிறவங்க பலர். இந்த ரெண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம், அதுல சேர்க்கப் படற உப்பு. அந்தக் காலத்துல அப்பளம் நல்லா விரிஞ்சு பொரியணும்னு பிரண்டை சாறு விடுவாங்க. இப்ப அதுக்குப் பதில் சோடியம். ஊறுகாயும் அதே மாதிரிதான். அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும்.

சாப்பிடக்கூடிய உணவுகள்:

* கீரை, முழு தானியங்கள், காய்கறிகள்,

* அசைவத்துல மீன் மட்டும் (அதுல உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது)

* ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.

* தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடம்புளி உபயோகிக்கலாம். கோக்கம்னு சொல்லப்படற கொடம்புளியை எந்தவித குழம்புலயும் சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

Post Comment

இரானுக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம்?


ஈரான் நாட்டின் மகளிர் கால்பந்தாட்ட அணி ஒலிம்பிக் போட்டியின் தகுது சுற்றில் இருந்து வெளியேற்ற பட்டுள்ளது.இது தோல்வியால் அல்ல மாறாக இந்த பெண்கள் இஸ்லாமிய ஹிஜாப் அணிந்து விளையாட கூடாதாம் . இது செய்தி ,ஏன் இதை  இந்தியாவுல சொல்லணும் நம்ம நாட்டு பிரச்சனைகள் பத்தாதா அப்படின்னு தானே யோசிக்கிறீங்க.இல்ல ஆரம்பிச்சுட்டான் மதத்தை பத்தி பேசன்னு நினைக்குரின்களா ?இல்லை நான் எந்த மதமும் சம்மதம் இல்லாதவன்.நான் மார்க்கத்தை பேணி நடக்கும் (முயற்ச்சிக்கும் ) மனிதன். சோ என்னதான் உளருரேன்னு படிச்சு பாருங்க சரியா .............


பெண்களை இந்த விளையாட்டு போட்டிகளில் இருந்து வெளியேற்றியது ஒலிம்பிக் குழுவா அல்லது அவர்களின் மதமா?அந்த பெண்களின் மதம் அவர்களை தலையங்கியுடன்  விளையாட அனுமதி அளித்துள்ளது ஆனால் தலையங்கியுடன் விளையாட அனுமதி அளிக்காதது ஒலிம்பிக் குழு தான். 
தலையங்கி இல்லாமல் விளையாடும் பெண்களை எதுன்னை வக்கிர கண்கள்   பார்வையாலும் சில்மிஷங்களாலும் கற்பழித்து வருகிறது என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. யு டுபில் இருக்கும் வக்கிர வீடியோ காட்சிகள் சாட்சிக்கு போதுமானதாக இருக்கிறது . 


பொதுவாகவே கொஞ்சம் அவங்க அவங்க வேதங்களில் உள்ள செய்திய கொஞ்சம் புரட்டி பாருங்க .நான் புரட்டியதில் இந்த தலைப்புக்கு சம்பந்தம் உள்ள சில உங்கள் பார்வைக்கு 

ரிக் வேதம் பாகம் 8 ஹைம் 33 வசனம் 19 
ரிக் வேதம் பாகம் 10௦ ஹைம் 85 வசனம் 30௦ 
                     பெண்களின் உடை மற்றும் தலையங்கி அணிதல் மேலும் கண்ணியமாக நடந்து கொள்ளுதல் பற்றி சொல்கிறது 

பைபிள் டயு ட்டேரானம்மி  பாகம் 22 வசனம் 5 

                     பெண்கள் தலையங்கி அணிய வேண்டும் என சொல்கிறது ...
மேலும் ஓரிடத்தில்(அந்த வசனம் மறந்துவிட்டது மன்னிக்கவும்  )பெண்கள் தலையங்கி அணியாவிட்டால் அவர்களுக்கு மொட்டை அடித்து தண்டிக்க வேண்டும் எனவும் கூறுகிறது ..

நம்ம நம்ம வேர்கள் இவ்வாறு இருக்க நாம் இதையெல்லாம் மறந்தும் மறக்கடிக்க பட்டும் இருக்கிறோம் ..மறக்காமல் உலகில் அதிமாக பின்பற்றப்படும் (the most practicing religion) ஒரு மதத்தினரை குறி வைத்து இப்படி தாக்குதல் நடத்துவதில் யாருக்கு என்ன லாபம்.இவர்களும் தங்கள் வேதங்களை விட்டு விலகி வரவேண்டும் என்ற நயவஞ்சகம் தான் இது.

சரி நம்ம நம்ம வீட்டுல வேத புத்தகங்கள் இருக்கா? 


       எங்க சார் இருக்கு இருதிருந்தால் இன்னைக்கு எல்லா பெண்களும் தலையங்கியுடன் காட்சி தருவார்கள் ,உலகமே ஒரே கொள்கையோட ஒற்றுமையா இருந்திருக்கும். ஒரு சாரார் படிக்க தான் வேதம் என்றும் அவர்கள் படித்து சொல்வது தான் வாக்கு என்றும் சொல்லி சொல்லியே நம்மை சோம்பேறிகளாகி ஜாதி மதம் என்று பிரித்து கொல்றாங்க.இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.

ராமர் , இயேசு மொகம்மது இவர்கள் அனைவர்கள் மீதும் கட்டுகதைகள் யார் சொன்னாலும் நம்பி விடுகிறோம்.உடனே உண்டியலை குலுக்கி கோடிகளை குவித்து விடுகிறார்கள் போலி மதவாதிகள்.

போதும் இதற்கு தயவு செய்து முற்றுபுள்ளி வையுங்கள் அணைத்து வேதங்களையும் படிக்கச் சுலபமான வழிகள் பல இருக்கு ஆனா அதில் சுவாரசியம் கம்மி சோ நம்ம செய்யவே மாட்டோம். 

ஒரு நாத்திக வாதியின் வலைப்பக்கத்தில் போய் வேதம் படிக்க நினைக்காதிங்க அங்கே நமக்கு மேலும் குழப்பமே மிஞ்சும்.தெளிவான மனநிலையுடன் (குற்றம் கண்டுபிடிக்கவே சிலர் படிப்பதுண்டு) நமக்கு நாமே படித்து புரிந்தால் இறைவனை காணலாம் இன்புற்று வாழலாம்.இதுவரை நாம் செய்து வந்த தவறுகள் கூட புரியும் .

நம்ம உடம்புக்கு நோய் வந்தால் டாக்டர்கிட்ட தான் போகணும்.இது காலங் காலமாய் நம்ம உள்ளத்தை ஆட்கொண்டுள்ள நோய் இதற்கு இறைவனின் மாசற்ற வார்த்தைகள் (கட்டளைகள்) மூலமே நிவாரணம் கிட்டும் .
                 

Post Comment

ஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்..!


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

ஆஸ்திரேலியாவில், இதுவரை இல்லாத அளவிலான இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை, தாங்கள் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது சிட்னியை தலைமையிடமாக கொண்ட "மை பீஸ் (My Peace)" என்ற அமைப்பு. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சிட்னி நகரின் பரபரப்பு மிக்க சாலைகளில் மிகப்பெரிய அளவிலான விளம்பரப் பலகைகளை நிறுவியுள்ளது இந்த அமைப்பு. கடந்த மே 26 ஆம் தேதி நிறுவப்பட்ட இந்த விளம்பரங்கள் இன்னும் நான்கு வார காலத்திற்கு அந்த பகுதிகளில் நீடிக்கும்.

இது குறித்த செய்தி ஆஸ்திரேலியாவின் பாரம்பரியமிக்க நாளிதழான "சிட்னி மார்னிங் ஹெரால்ட்"டில் வெளிவந்தவுடன் கூடவே பரபரப்பும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. இந்த விளம்பர பலகைகள் பற்றி கருத்து தெரிவிக்கும் இந்த பத்திரிகை "கிருத்துவ நம்பிக்கையின் அடிப்படையிலேயே கை வைப்பதாக உள்ளன இந்த விளம்பரங்கள்" என்று குறிப்பிட்டுள்ளது.

அப்படி என்ன இருக்கின்றது அந்த விளம்பர பலகையில்?
பின்வருவது தான் அந்த விளம்பர பலகைகளில் உள்ள வாசகம்,
Jesus: A Prophet of Islam - இயேசு : ஓர் இஸ்லாமிய இறைத்தூதர்

மேற்கண்ட வாசகத்திற்கு பக்கத்தில் இந்த அமைப்பின் தொலைப்பேசி எண்கள் மற்றும் வலைத்தள முகவரி கொடுக்கப்பட்டு "குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை"இலவசமாக பெற தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விளம்பரங்கள் குறித்து விளக்கமளிக்கும் இத்திட்ட அமைப்பாளர் தியா முஹம்மத் (Diaa Mohamed), முஸ்லிம்களையும் கிருத்துவர்களையும் ஒரு பொதுவான பார்வையின் கீழ் கொண்டுவரவும், முஸ்லிம்கள் ஏசுவை நம்புகின்றவர்கள் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுமே இந்த விளம்பரங்கள் என்று கூறியுள்ளார்.

வரும் நாட்களில் மேலும் சில வாசகங்களை கொண்ட விளம்பர பலகைகள் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வாசகங்கள்,
• Holy Qur'an: The Final Testament - புனித குர்ஆன் : கடைசி ஏற்பாடு.
• Muhammed (s): A Mercy to Mankind - முஹம்மது (ஸல்): மனிதகுலத்தின் கருணை.
• Islam: Got Questions? Get Answers - இஸ்லாம்: கேள்விகளா? பதிலை பெற்று கொள்ளுங்கள்.

இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்புகள் எழ தொடங்கியுள்ளன. இரு நாட்களுக்கு முன்பு ஒரு விளம்பரப்பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளது. தாங்கள் இதற்காக பின்வாங்க போவதில்லை என்றும், அந்த விளம்பரங்கள் மூலம் தங்களுக்கு வந்த அழைப்புகளில் பெரும்பாலானவை பாசிடிவ்வாகவே இருந்ததாகவும், சுமார் பத்து சதவித அழைப்புகள் மட்டுமே தங்களை தாக்கக்கூடிய எண்ண அலைகளில் இருந்ததாவும் தியா முஹம்மத் தெரிவித்துள்ளார். மேலும், சேதப்படுத்தப்பட்ட அந்த பலகை விரைவிலேயே சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். 

இந்நிறுவனத்தின் முதல் செயற்திட்டம் எதிர்ப்புகளை சந்திக்க ஆரம்பித்துள்ள நிலையில் இவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேலும் பரபரப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகின்றது. அதாவது, நான்கு வார காலத்திற்கு, சிட்னியின் முக்கிய வழித்தடங்களில் ஓடும் சுமார் நாற்பது பேருந்துகள் தங்களது இஸ்லாமிய விளம்பரங்களை தாங்கி செல்லும் என்று அறிவித்துள்ளது இந்த அமைப்பு.

பேருந்துகளின் பின்புறத்திலும், பக்கவாட்டிலும் இருக்கும் இந்த விளம்பரங்கள், "இஸ்லாம் குறித்த கேள்விகளா? தொடர்பு கொள்ளுங்கள் இந்த எண்களில்" என்று இருக்குமாம். இது குறித்த மாதிரியை தன் தளத்தில் வெளியிட்டுள்ளது "My Peace".

நீங்கள் மேலே பார்த்தது மட்டுமின்றி, தங்களின் அடுத்தக்கட்ட திட்டமாக, தொலைக்காட்சிகள் வழியாகவும் தங்களது இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள போவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் வலைத்தளம் பல்வேறு தகவல்களை கொண்டதாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது (தள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது). 

தங்களது செயற்பாடுகளாக இவர்கள் கூறியுள்ளது,
•இஸ்லாம் குறித்த தவறான புரிந்துணர்வுகளை கையாள்வது,
•சக ஆஸ்திரேலியர்களுக்கு இஸ்லாம் பற்றி எடுத்து சொல்வது,
•இஸ்லாம் குறித்த எவ்விதமான கேள்வியையும் முஸ்லிமல்லாதவர்கள் கேட்க முன்வருமாறு அழைப்பது,
•குர்ஆன் மற்றும் இதர இஸ்லாமிய நூல்களை இலவசமாக அளிப்பது,
•பள்ளிவாசல்களுக்கு முஸ்லிமல்லாதவர்களை அழைத்து செல்வது,
•எந்தவொரு தலைப்பிலும் சொற்பொழிவாற்ற தயாரான நிலையில் அறிஞர்களை வைத்திருப்பது,

மேலே குறிப்பிட்டுள்ளவை மட்டுமின்றி புதிய முஸ்லிம்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் மிக மும்முரமாக செயல்படுகின்றனர் இந்த இயக்கத்தினர். அல்ஹம்துலில்லாஹ். பெண்களுக்கான பகுதியும் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது.

உலகளவில் பல இஸ்லாமிய இயக்கங்களை கண்டு நான் வியந்துண்டு. தங்கள் மார்க்கத்தின் மீதான ஆழ்ந்த பற்று, எவ்வித கேள்விக்கும் தங்களிடம் பதில் உண்டு என்ற அசராத நம்பிக்கை, அதனை வெளிப்படுத்தும் விதமான விவாதங்கள், நேர்த்தியான முறையில் வடிவமைப்பட்ட செயற்திட்டங்கள் என்று இந்த இயக்கங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அந்த வரிசையில் இப்போது "My Peace"சும் சேர்ந்துள்ளது. மாஷாஅல்லாஹ்...

குறிப்பு:
நாம் மேலே பார்த்தது போன்ற செயல்திட்டத்தை "Gain peace" என்ற அமைப்பு கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் செயல்படுத்தி வருவது இங்கே நினைவுகூறத்தக்கது
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
MY PEACE official website:
Gain Peace official website:

Post Comment

Monday, June 6, 2011

B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு படிக்க


B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு தற்போது பெரும்பாலான மாணவர்களின் விருப்ப படிப்பாக மாறிவருகின்றது. தமிழகத்தில் 12 கல்லூரிகளில் மட்டும்தான் இந்த படிப்பு உள்ளது. அதில் 2 கல்லூரிகள் (சென்னை புது கல்லூரி, கீழகரை சதக் கல்லூரி)முஸ்லீம்களால் நடத்த படுகின்றன.

B.Arch படிப்பில் சேர அண்ணா பல்கலை கழகம் வருட வருடம் கலந்தாய்வு (counseling) நடத்துகின்றது. அதற்க்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது, விண்ணப்ப படிவம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் மட்டும்தான் கிடைக்கும்.

விண்ணப்பத்தை பெறுவதற்க்கு NATA தேர்வில் தேர்சி பெற்று இருக்க வேண்டும். NATA தேர்வின் முழுவிபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. NATA தேர்வின் மதிப்பெண் சான்றிதழுடன் (Score card) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்திற்க்கு சென்று விண்ணப்பத்தை பெற வேண்டும்.

B.Arch கலந்தாய்வு (counseling) முறை : +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ன்னையும், NATA தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும் வைத்து கட் ஆப் மதிப்பெண் கணக்கிடபடுகின்றது. அதாவது +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ணை 6 – ஆல் வகுத்துகொள்ள வேண்டும், அதனுடன் NATA தேர்வின் மதிப்பெண்ணை கூட்டினால் வருவதுதான் B.Arch கட் ஆப் மதிப்பெண். இது 400 மதிப்பெண்ணுக்கு
 இருக்கும்.

உதாரணத்திற்க்கு ஒரு மாணவர் +2 தேர்வில் 1050 மதிப்பெண்னும், NATA தேர்வில் 130 மதிப்பெண்னும் எடுத்து இருந்தால், அவரின் கட் ஆப் மதிப்பெண் 305 ஆகும்.

இந்த கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை பட்டியல் (Rank list) தயாரிக்கப்பட்டு மாணவர்கள் கலந்தாய்விற்க்கு (counseling) அழைக்கப்படுவார்கள். இந்த B.Arch கலந்தாய்வில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது.

NATA (National Aptitude Test in Architecture) தேர்வு
இது ஒரு கட்டிட நிர்மான கலை திறன் ஆய்வு தேர்வாகும். இதை எழுதுவதர்க்கு தமிழகத்தில் 15 மையங்கள் உள்ளன. அங்கு சென்று NATA தேர்வு எழுத நாம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து ஒருவாரம் அல்லது 10 நாளில் தேர்வு எழுதலாம். தேர்வு கட்டணம் ரூ.800 . தேர்வு எழுதிய ஒரு நாளில் மதிப்பெண் சான்றிதழ் (Score card)வழங்கப்படும். இந்த தேற்விற்க்கு தயாராவதற்க்கு புத்தகங்கள் உள்ளன. இந்த தேர்வு எழுதுவதற்க்கு பயிற்சியும் அளிக்கப்படுகின்றது, ஆனால் பயிற்சி கட்டணம் ரூ.6000 முதல் ரூ.8000 வரை இருக்கும்.

NATA தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. ஒன்று Online தேர்வு 100 மதிப்பெண் கொண்டது, (Chose the best answer type) மற்றொன்று வரைதல் தேர்வு (Drawing Test) 100 மதிப்பெண் கொண்டது. மொத்தம் 200 மதிப்பெண், இரண்டு தேர்விலும் சேர்த்து குறைந்தது 80 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 80 -க்கும் குறைவாக மதிபெண் எடுத்தால் மீண்டும் இந்த தேர்வை எழுதலாம். ஆனால் அதிக பட்சமாக 3 முறைக்கு மேல் எழுத முடியாது. அதாவது மூன்று முறை NATA தேர்வு எழுதி 80 மதிப்பெண் எடுக்காவிடால் நடப்பு ஆண்டில் (Current year) B.Arch படிக்க முடியாது. அடுத்த ஆண்டில் தேர்வு எழுதி படிக்கலாம். NATA தேர்வு எழுத தமிழகதில் உள்ள 15 மையங்கள் மற்றும் NATA தேர்வு பற்றிய இதர விபரங்கள் இந்த www.nata.in இணையதளத்தில் உள்ளன.

Post Comment

சமச்சீர் கல்வி....! குறை நிறைகள் பற்றிய ஒரு பார்வை!


புதிய அரசு பொறுப்பேற்ற கணம் முதல் இன்று வரை சமச்சீர் கல்வி பற்றிய பல் வேறு செய்திகளை நாம் வாசித்து விட்டோம். சமச்சீர் கல்வியில்  இருக்கும் சாதக பாதகங்களையும் சமச்சீ கல்வி பற்றிய ஒரு பார்வையையும் கழுகு தனது வாசகர்களுக்கு இந்த கட்டுரையின் மூலம் தெளிவாக்குகிறது



சமச்சீர் கல்வி என்றால் என்ன?
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே பாடத்திட்டம். இது CBSE மற்றும் இண்டெர்நேசனல் சிலபஸ் etc… இவைகளுக்கு இது பொருந்தாது.

சமச்சீர் கல்வி திட்டத்தின் நிறைகளும் குறைகளுமாக கருதப்படுவது:

இதில் உள்ள நன்மைகள் என்னவெல்லாம், என்று பார்த்தோமானால் சமச்சீர் என்ற வார்த்தையிலே இனிமை இருப்பதோடு மட்டுமல்லாமல் இதனால் மெட்ரிக்குலேசன் மற்றும் தனியார் பள்ளிகள் தங்கள் இஸ்டம் போல் புத்தகங்களுக்கு கட்டணம்  வசூலிக்கமுடியாது. பாடத்திட்டத்தையும் ஒரே அடியாக குறை சொல்ல முடியாது என்பதும் உண்மை. கற்றலின் இனிமைஇதையே தாரக மந்திரமாகக் கொண்டு இப்பாடத்திட்டங்கள் பல்வேறு அறிஞர்கள் கருத்தரங்குகள் நடத்தியும், நேரடி ரிப்போர்ட்கள் செய்தும் தயாரிக்கப்பட்டதே… இதற்காகவும் அரசுப்பணம்(மக்கள் பணம்) செலவழிக்கப்பட்டது என்பதையும் கருத்தில் கொள்க பின்னர் உதவும்.

இதன் குறைகளாக நம்மில் ஒரு பகுதியினர் சொல்வது என்னவென்று பார்த்தோமானால் சமச்சீர் என்று சொல்லி கல்வியின் தரத்தையும் பாடத்திட்டதின் தரத்தையும் குறைத்து விட்டார்கள் என்றும் சில அரசியல் உள்நோக்கமும், காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதை இந்த வருடம் தடை செய்து இருக்கிறார்கள் என்று…

உண்மையான காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் ஒரு நாட்டின் குடிகளுக்கு சிறந்த தரமான கல்வியை இலவசமாக அளித்தால் தானே ஒரு நல்ல தலைமுறை உருவாகும். இதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் இதற்கும் தடையாக நம் நாட்டின் மக்கள் தொகை இருக்கிறது என்கிறார்கள். இருக்கட்டுமே…. எத்தனை கோடிகள் அநாவசியமான வழிகளில் எம் மக்களின் பணம் சூறையாடப்படுகிறது. எங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்ட அரசியல் பிரதிநிதிகளே… அப்பொழுதெல்லாம் இந்த தரமான கல்வி வழங்குவது பற்றியும், அதற்குத் தேவைப்படும் பணம் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள்.


முதலில் நம் நாட்டில் ஒரு முரண் கண்ணுக்குப் புலப்படாமல் காலங்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆரம்பக் கல்வியை நல்ல தரத்துடன் கொடுக்கப்படல் வேண்டும். அதிக நிதி உதவியும் ஆரம்பக் கல்விக்கும் செலவழிக்கப் பட வேண்டும். அதாவது, ஐஐடி, ஐஐம் போன்ற அரசின் உதவியுன் நல்ல தரத்தில் இயங்கும் உயர்கல்வி பல்கலைக்கழகங்களுக்கு செல்ல ஏதுவான வகையில் உள்ள பாடத்திட்டத்துடன் கூடிய சிறந்த பள்ளிகளை ஒவ்வொரு மாநிலத்திலும் அரசின் மூலமாக உருவாக்கப்பட்டால் ஏற்றத்தாழ்வுகள் குறையும். மாநில அரசு வைத்துள்ள பாடத்திட்டத்தின் மூலமாக படித்து வெளிவரும் எம் கிராமத்துப் பிள்ளைகளுக்கு இது ஏன் இவ்வாறு எட்டாக்கனியாக இருக்க வேண்டும்.


அது எப்படி ஆரம்பக்கல்விக்கு குறைந்த அளவில் உதவித் தொகையும் உயர்கல்விக்கு மட்டும் ஒவ்வொரு ஐஐடிக்கும் ஆண்டுக்கு 100 கோடிகள் உதவித் தொகை. அதுவும் நன்றாகப் படித்து வெளிவரும் பிள்ளைகளுக்கு, இந்த மாதிரியான உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியாத நிலை. இங்கு ஒரு ஏற்றத்தாழ்வு நிலையே உள்ளது. இல்லையெனில் சமச்சீர் கல்வி முறை வேண்டாம், என் பிள்ளையும் கார்ப்பரேசன் பிள்ளையும் ஒரே பாடத்திட்டத்தில் படிப்பதா என்று பொங்கும் பணக்காரர்களுக்கே இந்த மாதிரியான உயர்கல்வி நிறுவனங்கள் அளிக்கும் கல்வி கிடைக்கும்.


காலங்காலமாகவும் இது அப்படித் தான் இருக்கிறது. கோடிக்கணக்கில் அரசின் உதவி(அனைத்து மக்களின் வரிப்பணம்) பெறும் இக்கல்வி நிறுவனங்களுக்கு எம் கிராமத்து பிள்ளைகள் செல்லவே கூடாதா? காரணம் ஒன்றும் மாணவர்களின் தரத்தில் இல்லை. அரசு இதுவரை கடைப்பிடித்து வந்த கொள்கைகளே காரணமாக உள்ளது.

அத்தகைய உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சென்று படிக்கும் வகையில் தரமான, அவர்களுக்குத் தேவையான பாடத்திட்டங்கள் கொண்ட தரமான பள்ளிகளை அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் நிறுவ வேண்டும். மாநில அரசும் ஆரம்ப கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பாடத்திட்டங்களில் நல்ல மாற்றத்தையும் கொண்டு வந்து, ஆசிரியர்களின் கற்று கொடுக்கும் திறத்தையும் அதிகப் படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.  அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் பண உதவித்தொகையை வழங்க வேண்டும்.


ஏன் அத்தகைய கல்லூரிகளுக்கு மட்டும் இத்தனை கோடிகளில் அரசு உதவித் தொகை?… அதிக பணம் வசூலிக்கப்படும் கோச்சிங் (2 laksh per annum) செண்டர்களில் இருந்து பயின்று IIT-JEE எழுதி செல்லும் குழந்தைகளுக்குத் தானே இத்தகைய கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கிறது. பெரும்பாலும் யாருடைய பிள்ளைகள் இத்தகைய முறைகளில் பயின்று கோடிகளில் அரசின் உதவி பெறும் ஐஐடிக்கு செல்கிறார்கள்… இந்த ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டாமா?
ஏன் ஐஐடிகளுக்கு மட்டும் இத்தகைய உதவிகள் என்று கேட்டால் உலகக் கல்வித் தரத்திற்கு இணையாக நம் நாட்டிலும் குறைந்த எண்ணிக்கையிலாவது இத்தகைய கல்லூரிகள் இருக்க வேண்டாமா என்பார்கள்… இருக்கட்டும். நியாயமே… ஆனால் அரசின் எந்தவொரு திட்டமும் அனைத்து மக்களுக்கும் சமத்துவமான முறையில் பயன்பட வேண்டாமா?

மாநில அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறை, அதன் குறைகள் களையப்பட்டு(அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் தவிர்த்து) CBSE பாடத்திட்டங்களுக்கு இணையான தரமான பாடத்திட்டங்களுடன் கொண்டுவரப்பட்டால் இந்நிலை மாறும். இது முடியவில்லை என்றால் குறைந்த பட்சமான எண்ணிக்கையிலாவது, ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களுக்கு செல்லத் தேவையான தகுதியுடன் ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.

இதற்கெல்லாம் பணத்துக்கு எங்கே செல்வது போன்ற காரணங்களை சொல்வார்களேயானால் அது நகைப்புரியதாகவும், எம்மை ஏமாற்ற நீவிர் சொல்லும் ஒரு காரணமாக அமைந்துவிடும். ஏனெனில் ஏதோ சில காரணங்களுக்காக 1000 கோடிகளில் கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடம், 200 கோடி செலவில் உற்பத்தி செய்யப்பட்ட சமச்சீர் கல்விப் புத்தகங்கள், இத்திட்டத்தை உருவாக்க செலவழிக்கப்பட்ட பணமும்… பழைய பாடத்திட்டத்தின் படியே, இன்னும் 200 கோடி செலவாகும் பணமும் எங்களின் வியர்வைப் பணமே… என்பதையும் நினைவுறுத்தி எம் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவீர்களா என்ற ஏக்கத்துடனே இக்கட்டுரையை யாம் முடிக்கிறோம்.

நன்றி கழுகு

Post Comment