Saturday, April 30, 2011

முதுகுவலிக்கு வீட்டு வைத்தியம்!


வாக்குறுதிகளையும், சத்தியங்களையும் பேணி நடக்காதவர்களின் இழப்பு!

யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் (யாதொரு) நற்பாக்கியமும் இல்லை. அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். இன்னும் மறுமையில் அவர்கள் (கருணையுடன் பார்க்கவும் மாட்டான், அவர்களை (பாவத்தை விட்டும் பரிசுத்தமாக்கவும் மாட்டான், மேலும் அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்:3:77)

இந்த மாதம்
வலேரி பொல்யாக்கொவ் பிறந்த நாள்

பெயர் : வலேரி பொல்யாக்கொவ்
பிறந்த தேதி : ஏப்ரல் 27, 1942
ஒரு ரஷ்ய விண்வெளி வீரர ஆவார்.
மனித விண்வெளி வரலாற்றில் இவரே
அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர்
மீர் விண்கலத்தில் மருத்துவ விண்வெளிவீரராக
14 மாதங்களுக்கு மேலாக ஒரே பயணத்தில்
14 மாதங்களுக்கு மேலாக விண்ணில் காலம்
கழித்து சாதனை புரிந்தார். இவரது மொத்த
விண்வெளிக் காலம் 22 மாதங்களாகும்.




 உங்களுக்குத் தெரியுமா?
தொடர்ந்து பலமணி நேரம் கம்ப்யூட்டரில் உட்கார்ந்திருந்தால் கைகளுக்கும் தோள்களுக்கும் வரும் நோயின் பெயர் கார்பல் டனல் சிண்ட்ரோம்.
தகவல்
30 கிலோ எடையை 60 நாட்களில் குறைப்பது எப்படி? 




தவிர்க்க வேண்டிய உணவுகள்
========================

1) பால், தயிர் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

2) புளியைத் தவிர்க்க வேண்டும்.

3) உப்பைக் குறைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூனுக்கும்
குறைவான உப்பை பயன்படுத்தவும் .

4) எண்ணெய் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

5) தினம் ஒரு கொடம்புளி கீற்றினை குழம்பில் இட்டு அதைச்
சாப்பிட வேண்டும் .

6) இரவில் நான்கு துண்டுகள் பப்பாளி சாப்பிட வேண்டும் .

7) காலையிலும், மாலையிலும் கிரீன் டீ மட்டுமே குடிக்க வேண்டும் .

8) இனிப்பை தொடவே கூடாது .

9) காய்கறிகள் இரண்டு கப் என்றால் அரிசி சாதம் ஒரு கப் சாப்பிட வேண்டும் .

10) தேங்காயைத் தவிர்க்க வேண்டும்.

11) கிழங்கு வகைகள், பூமியின் அடியில் விளையும் காய்கறிகள் தவிர்க்க வேண்டும்.

12) மட்டன், சிக்கன் தவிர்க்க வேண்டும்.


சாப்பிட வேண்டிய உணவுகள்
==================

காலை (7.30 மணிக்கு)
==================

* கிரீன் டீ ஒரு கப் தினம் தோறும்.

* தோசை என்றால் மூன்று தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு.

* இட்லி என்றால் மூன்று, தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி.

* சப்பாத்தி என்றால் இரண்டு அதனுடன் காய்கறிக் குருமா(தேங்காய், எண்ணெய் சேர்க்காமல் செய்தது)

* ஒரு கப் சாதம்(சுடுதண்ணீர் சேர்த்தது) அத்துடன் இரண்டு கப் காய்கறிகள்

>> மேற்கண்டவற்றில் ஏதாவதொரு உணவு காலையில் எடுத்துக் கொள்ள வேண்டும் .

* காலை பத்து மணியளவில் சில மேரி (அ) எதாவது பிஸ்கட்டுகளுடன் கொஞ்சம் தண்ணீர்.

மதியம் ( 12.45க்கு)
================
கீரை, ஒரு கப் சாதம், இரண்டு கப் வெந்த காய்கறிகள், பருப்பு, முட்டையின் வெள்ளைக்கரு (வாரம் ஒரு தடவை மட்டும்), சாம்பார், குழம்புகள் இவற்றில் காரம் அதிகமிருக்க கூடாது . புளிக்குப் பதில் கொடம்புளி பயன்படுத்தவும் . கிழங்கு வகை காய்கறிகளைத் தொடவே வேண்டாம் . நாட்டுக் காய்கறிகளுடன் பருப்பு வகைகள் சேர்த்துக் கொண்டால் நல்லது.

மாலை (4.00க்கு)
================
* ஒரு கப் கிரீன் டீயுடன், சில மேரி (அ) எதாவது பிஸ்கட்டுகள்.

இரவு(7.30க்கு)
===========
* தோசை என்றால் மூன்று தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு

* சப்பாத்தி என்றால் இரண்டு அதனுடன் காய்கறிக் குருமா(தேங்காய், எண்ணெய் சேர்க்காமல் செய்தது)

* அத்துடன் மதியம் மீதமான காய்கறிகள் கொஞ்சம்

படுக்கும் முன்பு
==============
* ஐந்தோ அல்லது ஆறோ துண்டுகள் நன்கு பழுத்த பப்பாளி.

* இரண்டு லிட்டர் தண்ணீரை பருக வேண்டும் .

மேற்கண்ட உணவினைச் சாப்பிட்டு வாருங்கள் . பின்பு ஒரு மாதம் எண்ணெய் சேர்க்காமல் சாப்பிடுங்கள் . அடுத்த மாதம் எண்ணெய் சேர்த்துச் சாப்பிடுங்கள் . மட்டன், மீன், சிக்கன் மாதமொருமுறைச் சேர்த்துக் கொள்ளுங்கள் . அவ்வளவுதான் உடல் எடை குறைந்து, உடல் லேசானது போல ஆகிவிடும் .

*முக்கியமாக கவனிக்க வேண்டியது: நேரம் தவறாமல் சாப்பிட 

வேண்டும். அதுமட்டுமின்றி இரவு பத்து மணிக்கு உறங்க சென்று 
விட வேண்டும். 



என் குறிப்பு : * மேலதிக தகவல்களுக்கு உங்களுடைய டடீசியன்களின்
பரிந்துரைகளை தொடரும்படி வேண்டுகிறேன். 

* இது எனக்கு மெயிலில் வந்த தகவல் . 



கல்வி

மே 9-ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
சென்னை, ஏப். 30: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சனிக்கிழமை அறிவித்தார்.

 மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலமாகவும் அரசுத் தேர்வுகள் துறையினரால் அறிவிக்கப்படும் இணையதளம், எஸ்எம்எஸ், தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 "மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் கிட்டதட்ட முடிவடைந்துவிட்டன. கம்ப்யூட்டரில் பதிவான மதிப்பெண்களில் உள்ள தவறுகளைத் திருத்தும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் மே 8-ல் தான் முடிவடையும். எனவே வரும் திங்கள்கிழமை (மே 9-ம் தேதி) முடிவுகள் அறிவிக்கப்படும்' என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 14-ம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு மே 25-ம் தேதியும் வெளியிடப்படலாம் என்று பள்ளி கல்வித்துறை செயலர் டி. சபிதா கடந்த வாரம் தெரிவித்தார். இந்த அறிவிப்பு அரசைக் கலந்து ஆலோசிக்காமல் பள்ளிக் கல்வித்துறையே தன்னிச்சையாக அறிவித்தது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார்.

 "தேர்வு முடிவு தேதிகளை அறிவிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரிகள், அதன் அமைச்சரைக் கலந்து ஆலோசித்து விட்டு முதல்வரின் ஒப்புதலைப் பெறுவர். அவர் அனுமதி அளித்த பிறகு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மூலமாகத் தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படும். இதுவே நடைமுறை. ஆனால், இதற்கு மாறாக, பள்ளிக் கல்வித்துறை செயலரே தேர்வு முடிவு தேதியை அறிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. தேர்தல் தேதி முடிவு அறிவிப்புக்கும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்கும் தொடர்பில்லை'' என்று அமைச்சர் தெரிவித்தார்.

 அமைச்சரின் எதிர்ப்பால், பிளஸ் 2 முடிவுகள் வெளியாகும் தேதியை முடிவு செய்வதில் குழப்பம் நிலவியது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு திடீரென அறிவித்துள்ளார்.

 10 வகுப்புத் தேர்வு முடிவு: பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இப்போது நடைபெற்றுவருகிறது. பணி முடிந்ததும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும்.

ஆரோக்கியச் செய்தி :

முதுகுவலிக்கு வீட்டு வைத்தியம்!

இன்றைய அவசர யுக வாழ்க்கையில் முதுகுவலி பிரச்சனை என்பது அநேகமாக பெரும்பாலானோர் சந்திக்க கூடியதாகவே உள்ளது.

வயதானவர்கள் மட்டுமல்லாது நடுத்தர, அவ்வளவு ஏன் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் இளவயதினர் கூட இந்த முதுகுவலிககு தப்புவதில்லை.

நமது உடலின் பெரும்பாலான எடையை முதுகுதான் தாங்குகிறது என்பதால், அதிக உடல் பருமன உடையவர்களுக்கு இப்பிரச்சனையின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும்.

சரியான நிலையில் உட்காரமல் இருப்பது, உடற் பயிறசி இல்லாமை, அளவுக்கு அதிகமான மன அழுத்தம், தசை இறுக்கம் போன்றவை முதுகுவலிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆனாலும் இந்த முதுகுவலிக்கான நிவாரணமும், அதிலிருந்து விடுபடவுமான சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள் இங்கே: 

நீங்கள் அதிக உடல் பருமன் உடையவராக இருந்தால், முதலில் உங்களது அதிகப்படியான எடையை குறையுங்கள்.அப்படி செய்தால்தான் உங்களது முதுகிற்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

முதுகுவலி ஏற்படும் சமயங்களில் பூண்டு போட்டு காய்ச்சிய எண்ணெய் அல்லது யூக்கலிப்ட்ஸ் தைலம் போட்டு நன்கு மசாஜ் செய்யுங்கள்.

ஒரு மேஜைக்கரண்டி தேனை வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்தாலும் முதுகுவலி குறையும்.

வைட்டமின் சி பற்றாக்குறையும் முதுகுவலிக்கு ஒரு முக்கிய காரணமாகும். எனவே உங்களது உணவில் வைட்டமின் சி சத்து அடங்கிய பால், முட்டை, கீரை போன்ற உணவுகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உப்பு கலந்த சுடு நீரில் ஒரு டவலை நனைத்து பிழிந்து, அதனை முதுகில் ஒத்தடம் கொடுக்க வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஒரே நிலையில் (position) தொடர்ந்து பல மணி நேரம் இருப்பதை தவிருங்கள். நேராக நிமிர்ந்து உட்காருங்கள்.கூன் போட்டு உட்காராதீர்கள்.சரியான நிலையில் உட்காராமல் இருப்பதும் முதுகுவலியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

Post Comment

Friday, April 29, 2011

வேலைவாய்ப்பை உருவாக்கும் வேளாண்படிப்புகள் (Agriculture studies)


சதி, துரோகத்திற்கு சத்தியத்தை பயன்படுத்தினால்...?
நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் (சதி, துரோகம்) ஆகியவற்றுக்குக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (அவ்வாறு செய்வதால்) நிலைபெற்ற (உங்களுடைய) பாதம் சறுகி விடும். அன்றியும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுத்துக்கொண்டிருந்த காரணத்தால், (இம்மையில் பெருந்) துன்பத்தை அனுபவிக்க நேரிடும். (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்:16:94)
கல்வி

வேலைவாய்ப்பை உருவாக்கும் வேளாண்படிப்புகள் (Agriculture studies)

உயர்ந்து வரும் விலைவாசிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று வேளாண் உற்பத்தி குறைந்தது, வேளாண் உற்பத்தியை அதிகபடுத்துவதன் மூலமே எதிகால தேவையை பூர்த்தி செய்ய முடியும், அரசும், தனியார் துறைகளும் வேளாண் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் . உற்பத்தியை அதிக படுத்தாதவரை விலைவாசியை குறைக்க முடியாது. எனவே வரும் காலங்களில் வேளாண்மை சார்ந்த படிப்புகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். பெரும்பாலும் மாணவர்கள் +2 முடித்துவிட்டு, பொறியியல், மருத்துவம் சார்ந்த படிப்புகளை அதிகம் தேர்ந்தெடுத்து படிப்பதால் வேளாண்மை துறை சார்ந்த படிப்புகளில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. 


மருத்துவம் (MBBS, BDS), பொறியியல் (B.EB.Tech) அல்லாத படிப்புகள் படிக்க விரும்புபவர்களுக்கு இந்த படிப்புகள் சிறந்தது. வேளாண் துறை சார்ந்த படிப்புகள் படிப்பதால், எங்கும் வேலைக்கு போய் அலைய தேவை இல்லை, வெளி நாடுகளுக்கு போய் கஷ்ட்டபட தேவை இல்லை, அரசின் மானியத்துடன், வேளாண் உற்பத்தியை சுயமாகவே துவங்கலாம், பலருக்கு வேலை கொடுக்கலாம்.

தமிழக அரசு தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் மூலம் வேளான் படிப்புகளை மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகின்றது. தமிழகத்தில் கோவை, மதுரை, தூத்துகுடி, திருச்சி, பெரியகுளம், மேட்டுபாளையம் ஆகிய 6 இடங்களில் 11 வேளாண் கல்லூரிகள் உள்ளன. இதில் வேளாண் துறைசார்ந்த கீழ் காணும் படிப்புகள் பயிற்றுவிக்கபப்டுகின்றன.

4 ஆண்டு அறிவியல் படிப்புகள் : B.Sc.(Agriculture, Horticulture, Forestry, Home Science, Agricultural Engineering)

4 ஆண்டு பொறியியல் படிப்புகள் : B.Tech.(Biotechnology) B.Tech.(Horticulture) , B.Tech.(Food Process Engineering), B.Tech.(Energy and Environmental Engineering), B.Tech.(Bioinformatics), B.S.(Agribusiness management ) ,B.Tech.(Agricultural information technology) .

மேற்கண்ட படிப்புகளில் சேறுவதற்கான விண்ணப்பம் 11 வேளாண்பல்கலை கழகங்களிலும் மே முதல் வாரத்தில் விண்ணப்பிக்க படுகின்றன இன்ஷா அல்லாஹ். விண்ணப்பத்தின் விலை ரூ.600. மே மாதம் கடைசி வாரத்திற்க்குள் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் :
Agricultural College and Research Institute, Coimbatore - 641 003
Agricultural College and Research Institute, Madurai - 625 104.
Agrl. College and Res. Inst., Killikulam, Tuticorin District- 628 252
Anbil Dharmalingam Agricultural College and Research Institute, Navalur
Kuttappattu, Trichy - 620 009.
Agricultural Engineering College and Research Institute, Kumulur, Pallapuram
(P.O.), Poovalur (Via),Trichy - 621 712
Horticultural College and Research Inst., Periyakulam - 625 604
Forest College and Research Institute, Mettupalayam - 641 301

தகுதிகள் : +2 தேர்வில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல்,
அல்லது கணிதம், இயற்பியல் வேதியியல் படித்து இருக்க வேண்டும், குறைந்தது 55% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும் (முஸ்லீம்களுக்கு 50 % ). 21 வயதிற்க்கு மிகாமல் இருக்க வேண்டும்

மாணவர்களை தேர்ந்தெடுக்கும் முறை: மேலே குறிபிட்டுள்ள 4 பாடங்களின் மதிப்பெண் அடிப்படையில் தகுதி பட்டியல் (Rank list ) தயாரிக்கப்பட்டு அதன்
அடிப்படையில் மாணவர்கள் கல்லூரியில் அனுமதிக்கப்படுவார்கள், இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது.

அனைத்து விபரங்களும் www.tnau.ac.in இந்த உள்ளது. மேலும் வேளாண்படிப்புகள்
பற்றி அறிந்து கொள்ள sithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

இந்த மாதம்
பெயர் : சார்லஸ் டார்வின்
மறைந்த தேதி : ஏப்ரல் 19, 1882
ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர்.
இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக்
கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான
அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த
உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம்
ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species)
என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.

 உங்களுக்குத் தெரியுமா?
லிபியா பாலைவனத்தில் நிழலிலேயே 1360 பாரன்ஹீட் வெப்பம் இருக்கும்.
தகவல்

நோய் தடுக்கும் தாம்பூலம்




மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும்.

கிமு 2- ம் நூற்றாண்டில் இலங்கையில் எழுதப்பட்ட மகா வம்சம் என்னும் நூலில் வெற்றிலை மெல்லுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள்:-

கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.

மருத்துவப்பயன் உடைய பகுதிகள்:-

இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. 

அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

தலைவலி:

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

தேள் விஷம்:

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி:

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்:

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் 
திணறல் குணமாகும்.

தாம்பூலம் தரித்தல்:

நமது உடலில் சுரக்கும் 24 விதமான “அமினோ அமிலங்கள்” வெற்றிலையில் உள்ளன. செரிமானத்துக்கும் பெரிதும் உறுதுணையாகும் இந்த “அமினோ அமிலங்களை” வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரணம் எளிதாகின்றது. அதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் “தாம்பூலம்” தரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலம், மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பினை தூண்டுவதுடன் ஒரு வித உற்சாக உணர்வினை தருகிறது. பெரும்பாலான நாடுகளில் வெற்றிலைக்கு பால் உணர்வை மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி இருப்பதாக கருதப்படுகிறது.

Post Comment

Thursday, April 28, 2011

கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்


மனிதனுடைய சத்தியத்தின் மூலம் அல்லாஹ்வின் சோதனை!
“ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்றால், நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதனங்களாக்கிக் கொள்ளாதீர்கள்। நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பது எல்லாம் இதன் மூலமாகத்தான்...” (அல்குர்ஆன்:16:92)


இந்த மாதம்
பெயர் : இராமானுஜர் மறைந்த தேதி : ஏப்ரல் 26, 1920
உலகத்தை வியக்கச் செய்த ஒப்பற்ற பெரும்
கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள
ஈரோட்டில் பிறந்தார். இவர் 1914 முதல் 1918
முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும்
அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.
உங்களால் பாரததேசத்திற்க்கே பெருமை.

சிந்தனை
முயலும் வெல்லும்; ஆமையும் வெல்லும்;
ஆனால் முயலாமை வெல்லாது!
 உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவில் பார்ப்பனிய ஆதிக்கம் நடப்பதை 1926ஆம் ஆண்டில் கண்டித்து எழுதிய ஒரு பம்பாய் பத்திரிகைமீது பார்ப்பனர்கள் வழக்குப் போட்டனர். அதை எதிர்த்து, பத்திரிகையாளர் சார்பில் வாதாடி வெற்றிபெற்றவர் அண்ணல் அம்பேத்கர்.





மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் மே 16 முதல் வினியோகம்.!


எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். (பல் மருத்துவ படிப்பு) படிப்பில் சேர்வதற்கு தமிழ்நாட்டில் வருடந்தோறும் மருத்துவ கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் நடைபெறுகிறது.

இந்த வருடத்திற்கான மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 16ஆம் தேதி முதல் வினியோகம் செய்யப்படுகிறது. மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு ஜூன் 30 ஆம் தேதி தொடங்குகிறது. +2 முடித்து தகுதியான மதிப்பெண்கள் கிடைக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

Post Comment

Wednesday, April 27, 2011

புகைப்படத்துறையின் புதிய பரிணாமம் : சொக்க வைக்கும் படங்கள் இணைப்பு!



மனிதனுடைய சத்தியத்தின் மூலம் அல்லாஹ்வின் சோதனை!

“ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்றால், நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதனங்களாக்கிக் கொள்ளாதீர்கள்। நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பது எல்லாம் இதன் மூலமாகத்தான்...” (அல்குர்ஆன்:16:92)
இந்த மாதம்
பெயர் : மார்க்கோனி
பிறந்த தேதி : ஏப்ரல் 25, 1874
வானொலியைக் கண்டு பிடித்தவர்.
"வானொலியின் தந்தை" எனப்படுபவர்.
1909  இல் இயற்பியலுக்கான நோபல்
பரிசை  Karl Ferdinand Braun இடன்
இணைந்து பெற்றார்.1890 மார்க்கோனிக்குக்
கம்பியிலாத் தொலைத் தொடர்பில் ஆர்வம் ஏற்பட்டு
ஆழ்ந்து ஆய்வுகள் செய்து வந்தார். இருபத்தி ஒன்றாம்
வயதில் 1895 முதன் முதலில் ஓரிரு மைல் தூரத்தில்
'திசைதிரும்பும் மின்கம்பம் [Directional Antenna]
மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றியும் பெற்றார்.
1937 இல் இவர் காலமான போது உலக வானொலி நிலையங்கள் 
அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.

சிந்தனை
அறிவை வளர்க்கும் செய்தியை தினமும் தேடிப் படிக்க வேண்டும்
என்றும் நம்மை விட்டு செல்லாதது அறிவு மட்டும் தான்.
பல வியாதிகளை தண்ணீரால் குணப்படுத்தலாம்
தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது. 

1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். 

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது. 

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய மற்றும் இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம்.

5. முதியோர், நோயாளிகள் மற்றும் 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம். 

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்கள் பின்வருமாறு: 

உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள். 

வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்.

சர்க்கரை வியாதி - 30 நாட்கள். 

புற்றுநோய் - 180 நாட்கள். 

காசநோய் - 90 நாட்கள்

தகவல்

புகைப்படத்துறையின் புதிய பரிணாமம் : சொக்க வைக்கும் படங்கள் இணைப்பு!

இது ஒரு புகைப் படத்தை விட சற்று அதிகமானது. ஆனால் வீடியோக் காட்சியை விட கொஞ்சம் குறைவானது…உங்களது விஷேட நிகழ்வுகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு விஷேட புதிய கலையை இரண்டு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இவை அசைவுகளுடன் கூடிய படங்கள். இந்தப் புதிய புகைப்படக் கலையின் மூலம் எடுக்கப்படும் படங்கள் நிழற்படங்களைப் போன்று தான் இருக்கும்.
ஆனால் அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அசைவுகளைக் காணலாம். அந்த வினோதமான அசைவு நிச்சயம் உங்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும். ஜெமிபெக் மற்றும் அவரின் சகாவான கெவின் பேர்க் ஆகியோர் இணைந்து இந்த எனிமேஷன் போட்டோ கிராபியை உருவாக்கி உள்ளனர். ஒரு படத்தில் சன நெரிசல் மிக்க ஒரு வீதியில் ஒருவர் தனது பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.
இன்னொரு படத்தில் ஒரு சிற்றுண்டிச் சாலைக்கு வெளிப்பகுதியில் வாகனம் ஒன்று வேகமாகச் செல்வது சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு படத்தின் ஏதாவது ஒரு குறிப்பிட்டப் பகுதிதான் அசையும். ஆனால் அது நிச்சயம் பார்ப்பவர்களைக் கவரும், அவர்களின் கவனத்தையும் ஈர்க்கும். அது தான் இந்தப படக்கலையின் விஷேட அம்சம்.

Post Comment

Tuesday, April 26, 2011

ஊனமுற்றோருக்கு மத்திய அரசின் கல்வி உதவி தொகை!.


விவாக விலக்கில் பிள்ளைகள் மீது அல்லாஹ்வின் கருணை!

தம்மால் (தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (எவரேனும்) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும். பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும் உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன்மீது கடமையாகும். எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்குமேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது. தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது. (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும். இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர்மீதும் குற்றமாகாது. தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை. ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதைப் பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 02:233).
இந்த மாதம்
பெயர் : சச்சின் டெண்டுல்கர் பிறந்த தேதி : ஏப்ரல் 24, 1973
தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர்.
தனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு
எதிராக 1989இல்  முதன்முதலாக அனைத்துலக
துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.
டெஸ்ட்போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும்
அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே, வரையறுக்கப்பட்ட
ஓவர் அனைத்துலகப் போட்டிகளில் (LOI) அதிகபட்சமாக
இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற
பெருமையும் டெண்டுல்கரைச் சேரும். உங்களால்
இந்தியாவுக்கு பெருமை.

சிந்தனை
நல்லது செய்யும் அனைவருமே உயர்ந்தவர்கள் தான். என்றாவது
ஒரு நாள் நாம் செய்த உதவிக்கு பலன் கிடைக்கும்.

கல்வி

 

ஊனமுற்றோருக்கு மத்திய அரசின் கல்வி உதவி தொகை!.

மத்திய மற்றும் மாநில அரசின் உதவி திட்டங்களும், அரசு சாரா அமைப்புகள் வழங்கும் உதவி திட்டங்களும் நம் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பெரும் பாலும் சென்றடைவதில்லை!. இதற்க்கு முழு முதல் காரணம், இவ்வகையான உதவி அறிவிப்புகளை, நம் மக்கள் மத்தியில் போதிய அளவிற்கு எடுத்து சென்று விழிப்புனர்வு ஏற்படுத்தாததே ஆகும்!. அதனால் இது போன்ற அறிவிப்புக்களை நம் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது நம் கடமை ஆகும். உதவிக்காக ஒவ்வொரு ஊரின் பள்ளி வாசலிலும், தெரு தெருவாகவும் கேட்டு அலைவதற்கு பதில், நாம் செலுத்திய வரியின் மூலமே தீட்டப்படும் இவ்வகையான திட்டங்களை, நம் மக்களுக்கு வாங்கி கொடுப்பதில் தீவிர முனைப்பு காட்டவேண்டும். 

Post Comment

Monday, April 25, 2011

மௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி!


குஃப்ரான இதுபோன்ற வார்த்தைகளே இறைவேதனையைக் கொண்டு வருகின்றது
‘இன்னும் ”அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு பிள்ளையை எடுத்துக் கொண்டான்!” என அவர்கள் கூறுகின்றனர். நிச்சயமாக நீங்கள் பெரும் அபாண்டத்தையே கொண்டு வந்து விட்டீர்கள். இதனால் வானங்கள் வெடித்து, பூமி பிளந்து, மலைகள் இடிந்து சிதறுண்டு விழப் பார்க்கின்றன. அர்ரஹ்மானுக்குப் பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிட்டதே (இதற்குக் காரணமாகும்.)’ (அல்குர்ஆன்: 19:88-91)
பழமொழி
கல்லடிச் சித்தன் போனவழி, 
காடுமேடெல்லாம் தவிடுபொடி.
இந்த மாதம்
பெயர் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
மறைந்த தேதி : ஏப்ரல் 23, 1916
ஒரு ஆங்கிலக்கவிஞரும் நாடக ஆசிரியருமாவார்,
ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர்
என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக
ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார்.
அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர்
என்றும் "பார்ட் ஆஃப் அவான்" (அல்லது வெறுமனே
"தி பார்ட்") இவர் அழைக்கப்படுகிறார்.வாழும் அவரது
படைப்புகளில் 38 நாடகங்கள்,154 செய்யுள் வரிசைகள்
இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல
பிற கவிதைகள் உள்ளன.
உங்களுக்குத் தெரியுமா?
சென்னையிலுள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையமே இந்தியாவின் மிகப்பழமையான புத்தக நிலையமாகும்; இது 1844 இல் ஏபெல் யோசுவா இக்கின்பாதம்சு என்ற ஆங்கிலேயரால் நிறுவப்பட்டது.
சிந்தனை
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்  
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள். 

Post Comment

Friday, April 22, 2011

வரலாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்கு!


அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இறைவேதனையை தவிர்த்துக் கொள்ளல்!

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன்பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள். (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன்: 39:54)
பழமொழி
ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.

இந்த மாதம்
விளாடிமிர் இலீச் லெனின்
Vladimir Ilyich Lenin
Владимир Ильич Ленин

மக்கள் கமிசார்களின் அமைப்பின் தலைவர்
பதவியில்
8 நவம்பர் 1917 – 21 ஜனவரி 1924
முன்னவர் அலெக்சாண்டர் கெரென்ஸ்கி
(ரஷ்ய இடைக்கல அரசுத் தலைவாராக)
பின்வந்தவர் அலெக்சி ரீக்கொவ்
(ஜோசப் ஸ்டாலின் (கட்சித் தலைவர்)
அரசியல் கட்சி போல்செவிக் கட்சி
பிறப்பு ஏப்ரல் 22 1870
சிம்பீர்ஸ்க், ரஷ்யப் பேரரசு
இறப்பு சனவரி 21 1924 (அகவை 53)
கோர்க்கி, சோவியத் ஒன்றியம்
தேசியம் உருசியர்
வாழ்க்கைத்
துணை நதேஷ்தா குரூப்ஸ்கயா
துறை அரசியல்வாதி, புரட்சியாளர்
சமயம் மத மறுப்பாளர்
கையொப்பம்
விளாடிமிர் லெனின்'s signature
உங்களுக்குத் தெரியுமா?
உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடம் கல்கத்தாவில் உள்ள South Point High School.


சிந்தனை
விழிப்பீர்! எழுவீர்! இன்றேல் நீர் வீழ்ந்து கிடப்பீர் என்றுமே!

பழம்
pomogranade3

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு.
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.

இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்திஅதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.

மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும்.இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

Post Comment