விவாக விலக்கில் பிள்ளைகள் மீது அல்லாஹ்வின் கருணை!
தம்மால் (தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (எவரேனும்) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும். பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும் உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன்மீது கடமையாகும். எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்குமேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது. தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது. (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும். இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர்மீதும் குற்றமாகாது. தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை. ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதைப் பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 02:233).இந்த மாதம்

பெயர் : சச்சின் டெண்டுல்கர் பிறந்த தேதி : ஏப்ரல் 24, 1973
தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர்.
தனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு
எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலக
துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.
டெஸ்ட்போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும்
அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே, வரையறுக்கப்பட்ட
ஓவர் அனைத்துலகப் போட்டிகளில் (LOI) அதிகபட்சமாக
இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற
பெருமையும் டெண்டுல்கரைச் சேரும். உங்களால்
இந்தியாவுக்கு பெருமை.
சிந்தனை
நல்லது செய்யும் அனைவருமே உயர்ந்தவர்கள் தான். என்றாவது
ஒரு நாள் நாம் செய்த உதவிக்கு பலன் கிடைக்கும்.
கல்வி
ஊனமுற்றோருக்கு மத்திய அரசின் கல்வி உதவி தொகை!.
மத்திய மற்றும் மாநில அரசின் உதவி திட்டங்களும், அரசு சாரா அமைப்புகள் வழங்கும் உதவி திட்டங்களும் நம் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பெரும் பாலும் சென்றடைவதில்லை!. இதற்க்கு முழு முதல் காரணம், இவ்வகையான உதவி அறிவிப்புகளை, நம் மக்கள் மத்தியில் போதிய அளவிற்கு எடுத்து சென்று விழிப்புனர்வு ஏற்படுத்தாததே ஆகும்!. அதனால் இது போன்ற அறிவிப்புக்களை நம் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது நம் கடமை ஆகும். உதவிக்காக ஒவ்வொரு ஊரின் பள்ளி வாசலிலும், தெரு தெருவாகவும் கேட்டு அலைவதற்கு பதில், நாம் செலுத்திய வரியின் மூலமே தீட்டப்படும் இவ்வகையான திட்டங்களை, நம் மக்களுக்கு வாங்கி கொடுப்பதில் தீவிர முனைப்பு காட்டவேண்டும்.
இந்திய (மத்திய) அரசாங்கம் ஊனமுற்றோருக்கான கல்வி உதவி தொகையினை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகின்றது. இந்த ஆண்டும் உதவி தொகையினை வழங்க உள்ளது. எனவே முஸ்லிம் சகோதரர்கள், தங்களின் ஊரில் ஏதேனும் ஊனமுற்றவர்கள் இருந்தால், அவர்களுக்கு இந்த அறிவிப்பினை எடுத்து சொல்லி, ஊனமுற்றோருக்கான கல்வி உதவி தொகையை அவர்கள் பெற வழிவகை செய்யுங்கள். ஏற்கனவே பொருளாதாரத்திலும், கல்வியிலும், அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்திலும் ஊனமுற்றுள்ள இந்த சமுதாயத்தில், உடலாலும் ஊனமுற்றுள்ள நம் சகோதரர்களுக்கு, எல்லா வழிகளிலும் அவர்கள் முன்னேற்றம் அடைய செய்வது நம் கடைமையாகும்.
ஊனமுற்றோருக்கான கல்வி உதவி தொகை விவரம்:
இந்தியாவில் படிக்க இந்திய அரசால் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப் இது என்பது குறிப்பிட தக்கது
பட்டப்படிப்பு (டிகிரி):
பட்டப்படிப்பு (டிகிரி):
விடுதியில் தங்கி பட்டப்படிப்பு படிக்கும் ஊனமுற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவி தொகை ரூ.1000 ஆகும். அதே சமயம் விடுதியில் தங்காமல் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.700 ஆகும்.
பட்டயப்படிப்பு (டிப்ளோமா):
விடுதியில் தங்கி பட்டப்படிப்பு படிக்கும் ஊனமுற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவி தொகை ரூ.700 ஆகும். அதே சமயம் விடுதியில் தங்காமல் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.400 ஆகும்.
B.E., D.C.E போன்ற புரபஷனல் பட்ட/பட்டாய படிப்புகளுக்கும் உதவி தொகை வழங்கப்படும்.
இதற்க்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி ஆகும். இத்திட்டம் ஓவ்வொரு ஆண்டும் உள்ளதால், படிக்கும் காலமெல்லாம் இந்த உதவி தொகையினை பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பம் www.socialjustice. nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.www. scholarshipsindia.com என்ற தளத்திலும் முழுமையான விவரங்களை பெறலாம்.
முழு விவரம் அனுப்ப வேண்டிய முகவரி:
National Handicapped
Finance and Development Corporation,
Govt. of India – Ministry of Social Justice
Red Cross Bhawan, Sector-12
Faridabad-1 21007, India
Phone: 0129-2226910, 2287513
Fax: 0129-2284371
Web: www.nhfdc.org
E.mail: nhfdc@nda.vsnl.net.in
கணணி
Panda Antivirus Pro 2011 கட்டண மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய
இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது.எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ, அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணினியில் புகுந்து நம் கணினியில் புகுந்து நாம் கணினியில் விதிர்க்கும் டேட்டாக்களை முடக்கி கடைசியில் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது. இந்த வைரஸ்களை அளிக்க நாம் அனைவரும் சில ஆன்ட்டி வைரஸ்களை உபயோகிக்கிறோம். அந்த முறையில் கணினியில் உள்ள வைரஸ்களை அளிப்பதில் panda Antivirus என்ற மென்பொருளும் சிறந்து விளங்குகிறது.
- இந்த மென்பொருள் இலவச மென்பொருள் அல்ல. இது ஒரு கட்டண மென்பொருளாகும்.
- இந்த மென்பொருளை முழுமையாக பெற இந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்க வேண்டும்.
- ஆனால் தற்போது இந்த தளத்தில் ஒரு புதிய சலுகையையை வெளியிட்டு உள்ளனர்.
- அதாவது Antivirus Pro 2011 மற்றும் Internet Security 2011 என்ற இரண்டு பயனுள்ள மென்பொருட்களையும் ஆறு மாத காலத்திற்கு இலவசமாக அனைவருக்கும் வழங்கி உள்ளனர்.
- இந்த பதிப்புகளை டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்தால் சீரியல் எண் கேட்காது. ஆறுமாத காலத்திற்கு இலவசமாகவே இயங்கும்.
- இந்த இரண்டு மென்பொருட்களையும் டவுன்லோட் செய்து கொண்டு ஒன்றை மட்டும் இன்ஸ்டால் செய்து மற்றொன்றை ஆறு மாத காலத்திற்கு அப்புறமாக இன்ஸ்டால் செய்தால் ஒரு வருடம் இலவசமாக இந்த சேவையை பெறலாம்.
- இந்த தளத்திற்கு சென்று நான் குறிப்பிட்டு காட்டியிருக்கும் DESCARGAR GRATIS என்ற பட்டனை அழுத்தி அந்த இரண்டு மென்பொருட்களையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
- DESCARGAR GRATIS என்றால் ஸ்பானிஷ் மொழியில் DOWNLOAD NOW என்று பொருளாம்.
- இந்த தளம் முழுவதும் ஸ்பானிஷ் மொழியால் தான் இருக்கும். இதை ஆங்கிலத்தில் பார்க்க வேண்டுமென்றால் TRANSLATE செய்து பார்த்து கொள்ளலாம்.
- இனி இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கணினியில் நிறுவி இலவசமாக ஒரு வருடத்திற்கு வைரஸ் பற்றிய கவலை இல்லாமல் கணினியை உபயோகிக்கலாம்.
- இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்க.
- உங்களுக்குத் தெரியுமா?சாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா பாடலை எழுதியவர் முகமது இக்பால்.
No comments:
Post a Comment