Wednesday, April 13, 2011

உங்களுக்குத் தெரியுமா?



அவனே அல்லாஹ்! உங்களுடைய இறைவன்! 

(அல்லாஹ்வாகிய) அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான். பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான். அவன் உங்களுக்காக கால்நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான். அவனே அல்லாஹ்! உங்களுடைய இறைவன்! அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்), அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படுகிறீர்கள். (அல்குர்ஆன்: 39:6)


பழமொழி

விளையாட்டாய் இருந்தது
வினையாய் முடிந்தது.
இந்த மாதம்
பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட்
Franklin Delano Roosevelt

பதவியில்
மார்ச் 41933 – ஏப்ரல் 121945
உதவி தலைவர்ஜோன் கார்னர்(1933–1941),
ஹென்றி வொலஸ்(1941–1945),
ஹாரி எஸ். ட்ரூமன் (1945)
முன்னவர்ஹேர்பேர்ட் ஹூவர்
பின்வந்தவர்ஹாரி எஸ். ட்ரூமன்

நியூயோர்க்கின் 48வது ஆளுநர்
பதவியில்
ஜனவரி 11929 – டிசம்பர் 311932
Lieutenant(s)ஹேர்பேர்ட் லேமன்
முன்னவர்அல்பிரட் ஸ்மித்
பின்வந்தவர்ஹேர்பேர்ட் லேமன்
அரசியல் கட்சிஜனநாயகக் கட்சி

பிறப்புசனவரி 30 1882
ஹைட் பார்க், நியூயோர்க்
இறப்புஏப்ரல் 12 1945(அகவை 63)
வோர்ம் ஸ்ப்றிங்ஸ்,ஜோர்ஜியா
வாழ்க்கைத்
துணை
எலனோர் ரூஸ்வெல்ட்]]
பழைய மாணவர்ஹார்வர்டு பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞர்
சமயம்எபிஸ்கோபல் தேவாலயம்
கையொப்பம்பிராங்கிளின் ரோசவெல்ட்'s signature                    
உங்களுக்குத் தெரியுமா?
தமிழ்நாடு சட்டமன்ற கீழவையின் 235 உறுப்பினர்களுள் 234 பேர் மட்டுமே தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய ஒருவர் ஆங்கிலோ இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக தேர்தலன்றி நியமிக்கப்படுகிறார்.
 சிந்தனை
வெற்றி கிடைக்கும் போது அதிக மகிழ்ச்சியை காட்டாமலும்
தோல்வி அடையும் போது வேதனை அடையாமலும் இருப்பது
நம் மனதிற்கும் உடலுக்கும் நல்லது.
பழம்
இறம்புட்டான்
{{{texttitle}}}

சப்பின்டேசி குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர உயரமுள்ள ஒரு பூக்கும் பல்லாண்டுத் தாவரமாகும். தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டு மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்சு, இலங்கை முதலான நாடுகளில் பரந்து காணப்படுகிறது. இப்பழத்தில் பழுப்பு நிறம் கொண்ட கொழுப்பும் எண்ணெயும் நிறைந்த விதை இருக்கிறது. இது சமையலிலும்சோப்பு தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இறம்புட்டானின் இலைகளும் தண்டுகளும் வேர்களும் மருத்துவத்திலும் சாயத் தொழிலும் பயன்படுத்தப்படுகின்றன.
தகவல்
மறக்கடிக்கப்பட்ட தியாகி..!

பதக் மியான்

1917 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் இரு தலைவர்கள்- ஒருவர் மகாத்மா காந்தி மற்றொருவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். இருவரும் பீகார் மாநிலத்தின் அன்றைய சம்பரன் மாவட்டத்தின்
தலைநகராக விளங்கிய மோடிஹாரிக்கு செல்கின்றார்கள்.
இண்டிகோ பண்ணைத் தோட்டத்தில் வேலைப்பார்த்து வந்த தொழிலாளர்களின் மோசமான நிலையை கண்டறிவதற்காக சென்றார்கள். அவர்களின் நிலையைக் கண்டு அதற்கு காரணமான பிரிட்டீஷ் அரசிற்கெதிரான போராட்டத்தை துவக்கினார்கள். இதுதான் பிரிட்டீஷாருக்கு எதிராக காந்தியடிகள் துவக்கிய முதல் போராட்டமாகும்.

இண்டிகோ பண்ணைத் தோட்டத்தின் மேலாளராக பொறுப்பு வகித்த வெள்ளைக்காரன் காந்தியை இரவு உணவுக்கு அழைக்கிறான். காரணம் காந்தி சாப்பிடப்போகும் உணவில் விஷம் கலக்கப்பட்டு அவரைக் கொல்வதுதான் அவனது நோக்கமாகும். அந்த பிரிட்டீஷ் மேலாளரான ஆங்கிலேயனிடம் சமையல்காரராக வேலைப்பார்த்தவர் பதக் மியான். அவரிடம் ஒரு கோப்பை பாலில் விஷம் கலந்து காந்திக்கு கொடுக்குமாறு கூறுகிறான்.ஆனால் பதக் மியானின் தேசப்பற்று இந்தக் கொடுஞ்செயலுக்கு இடம் தரவில்லை. அவர் கோப்பையை எடுத்துச்சென்று காந்தியிடம் விஷயத்தை கூறிவிடுகிறார். இதற்கு டாக்டர் ராஜேந்திரபிரசாத் நேரில் கண்ட சாட்சியாவார்.

இதன் மூலம் பதக் மியான் காந்தியின் உயிரை காப்பாற்றுகிறார். காந்தியின் உயிர் காப்பாற்றப்பட்டதால் காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அங்கமாக விளங்கி இந்தியாவின் தேசத்தந்தை எனப் போற்றப்படுகிறார். ஆனால் இச்சம்பவத்திற்கு பின்னர் பதக் மியான் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாயிற்று.

பதக் மியான் காந்திஜிக்கு விஷம் கொடுக்காததால் பிரிட்டீஷ் மேலாளர் கடும் கோபம் அடைந்து பதக் மியானை சிறையிலடைத்து கடுமையாக சித்திரவதைச் செய்கிறார். அவருடைய வீடு சுடுகாடாக மாற்றப்பட்டது. பின்னர் அவரும் அவருடைய குடும்பமும் அவர் வாழ்ந்து வந்த கிராமத்தை விட்டும் துரத்தப்பட்டனர். இந்திய தேசபிதாவின் உயிரைக் காப்பாற்றிய அந்த மனிதர் மறக்கடிக்கப்பட்டார்.

ஆனால் காந்தியைக்கொன்ற நாதுராம் கோட்சேவை தெரியாத நபர் இல்லை எனலாம். 1950 ஆம் ஆண்டு டாக்டர் ராஜேந்திரபிரசாத் ஜனாதிபதியாக இருக்கும்பொழுது மோடிஹாரிக்கு சுற்றுப்பயணம் சென்றபொழுது பதக் மியானின் தன்னலமற்ற தியாகத்திற்காக 24 ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக அளிக்க உத்தரவிட்டார்.

60 ஆண்டுகள் தாண்டிவிட்டன, இதுவரை மறைந்த ஜனாதிபதியின் உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. மறக்கடிக்கப்பட்ட அந்தத்தியாகி 1957 ஆம் ஆண்டு மரணித்துவிட்டார். தற்பொழுது அவருடைய ஐந்து பேரர்களும் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள அக்வா பர்ஸாவ்னி கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். தனது அன்றாட வாழ்க்கைக்காக இடம் புலர்ந்து தொழிலாளர்களாக வேலைப்பார்த்து வருகிறார்கள்.ஏனெனில் இவர்களுக்கு கல்வியறிவு இல்லை. அவர்கள் அரசு அதிகாரிகளைச் சென்று பார்த்து முறையிட்டபொழுது அவர்களுடைய அனைத்து முயற்சிகளும் வீணானதுதான் மிச்சம்.

சமீபத்தில் இந்தியாவின் ஜனாதிபதியான பிரதீபா பாட்டீல் இவர்களின் பரிதாப நிலையை அறிந்து இந்தியாவின் முதல் ஜனாதிபதியால் அன்பளிப்பாகக் கொடுக்க உத்தரவிட்ட நிலம் அவர்களுக்கு கிடைக்க உறுதியளித்துள்ளார். இது காந்திஜியின் 62-வது நினைவுதினத்திற்கு எட்டு நாட்களுக்கு முன்பு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற பத்திரிகை பதக் மியான் குடும்பத்தின் மோசமான நிலையைப் பற்றி வெளியிட்ட கட்டுரையைப் படித்த பிறகு தான் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டார்.

ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரி அர்ச்சனா தத்தா சம்பரன் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுகளுக்கு பீகார் அரசு ஜனாதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்துகிறதா என்பதை பற்றி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பீகார் முதல்வரும் இவ்விஷயத்தில் அக்கறையோடு திர்ஹுட் டிவிசனல் கமிசனருக்கு பதக் மியானின் குடும்பத்திற்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுமா அல்லது காந்திஜியின் அடுத்த நினைவுதினம் வரை கிடப்பில் போடப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

source:twocircles

டுடே லொள்ளு  

இன்னடா ஸ்டெயிலா நடக்குற 


Post Comment

No comments:

Post a Comment