அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இறைவேதனையை தவிர்த்துக் கொள்ளல்!
ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன்பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள். (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன்: 39:54)
பழமொழி
ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
இந்த மாதம்
![]() |
விளாடிமிர் இலீச் லெனின்
Vladimir Ilyich Lenin
Владимир Ильич Ленин
மக்கள் கமிசார்களின் அமைப்பின் தலைவர்
பதவியில்
8 நவம்பர் 1917 – 21 ஜனவரி 1924
முன்னவர் அலெக்சாண்டர் கெரென்ஸ்கி
(ரஷ்ய இடைக்கல அரசுத் தலைவாராக)
பின்வந்தவர் அலெக்சி ரீக்கொவ்
(ஜோசப் ஸ்டாலின் (கட்சித் தலைவர்)
அரசியல் கட்சி போல்செவிக் கட்சி
பிறப்பு ஏப்ரல் 22 1870
சிம்பீர்ஸ்க், ரஷ்யப் பேரரசு
இறப்பு சனவரி 21 1924 (அகவை 53)
கோர்க்கி, சோவியத் ஒன்றியம்
தேசியம் உருசியர்
வாழ்க்கைத்
துணை நதேஷ்தா குரூப்ஸ்கயா
துறை அரசியல்வாதி, புரட்சியாளர்
சமயம் மத மறுப்பாளர்
கையொப்பம்
உங்களுக்குத் தெரியுமா?
உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடம் கல்கத்தாவில் உள்ள South Point High School.
சிந்தனை
விழிப்பீர்! எழுவீர்! இன்றேல் நீர் வீழ்ந்து கிடப்பீர் என்றுமே!
பழம்

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு.
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.
இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்திஅதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும்.இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
மாதுளம் முத்துக்களில் சிறிதளவு …. மிளகுப் பொடியும் சேர்த்துச் சாப்பிட்டால் அனைத்து வகையான பித்தரோகமும் (இனஷா அல்லாஹ்) தீரும்.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.
மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் (இனஷா அல்லாஹ் ) பெறலாம்.
மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி (இனஷா அல்லாஹ்) நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும்.
பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரைமணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒரு கிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன்மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்துக் கொண்டு மீண்டும் பாகுபதம் வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்தநோய்கள் நீங்கும். ஆயாசம் அகலும். வீரிய விருத்திக்கான டானிக் ஆகும். நினைவாற்றல் பெருகும்.
பொதுவாக மாதுளம்பழச்சாற்றுக்கு நான்கில் ஒரு பாகம் சீனி கலந்து சாப்பிட்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும்
சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும்
உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்று விடும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கிற்கு இதே மருந்தை மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும்.மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து காலை, மாலை 15 மில்லி அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல், வயிற்றுப் பொருமல் (இனஷா அல்லாஹ்) தீரும்.
மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ளதட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும்.
மலராத மாதுளம் மொட்டுக்களைக் காய வைத்து பொடித்துக் கொண்டு இதில்
சிறிதளவு ஏலம், கசகசாவையும் பொடித்துக் கலந்து 10 கிராம் அளவில் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வயிற்றுப் போக்கும் சீத பேதியும் இனஷா அல்லாஹ் குணமாகும். உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். கொப்பளிப்பது தொண்டை வரை செல்ல வேண்டும். இவ்வாறு கொப்பளித்தால் தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு (இனஷா அல்லாஹ்) நிவர்த்தியாகும்.
மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்துசாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை இனஷா அல்லாஹ் நீங்கும். அலர்ஜியை நிவர்த்திக்கும் மூலச்சூடும் வெட்டை நோயும் நீர்க்கடுப்பும் (இனஷா அல்லாஹ்) நிவர்த்தியாகும்.
மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப்பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து விடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் (இனஷா அல்லாஹ்) தீரும்.
மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம்.
புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2_5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் (இனஷா அல்லாஹ்) குணமாகும்.
துவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின் மீது போட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும். மாதுளம் மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும் ‘பற்கள் கெட்டிப்படும். ஈறுகளின் நோய் தீரும். பற்களின் வலி குறையும். மாதுளை ஒரு பல்முனைநிவாரணியாகப் பயன்படுகிறது.
தகவல்
வரலாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்கு!
வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை உலகிற்கே வழிகாட்டியாக இருந்து முஸ்லிம்கள் விளக்கியுள்ளார்கள்.
“ஆராயாமல் செய்திகளைப் பரப்பாதீர்கள்” என்ற இறைவனின் கட்டளைக்கு இணங்கியே இவர்கள் வரலாற்றை அணுகியுள்ளனர். வரலாற்றை வரையக்கூடிய கலை தான் “வரலாற்று வரைவியல்”(Historiagraphy). வரலாற்றை எழுதுவதற்கான முறைமையையும் உலகிற்குக் கற்றுத் தந்தவர்கள் முஸ்லிம்களே. இத்தகைய
பெருமைக்குரிய முஸ்லிம் வரலாற்று அறிஞர்களில் சிலரை இந்தக் கட்டுரையில் காண்போம். எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.
வரலாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்கு
முஸ்லிம் வரலாற்று வரைவியலின் தோற்றம் என்பது முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே நிறுவப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தங்களின் கைகளாலேயே வரலாற்றை எழுதத் துவங்கினர். அதாவது, தங்களின் பாரம்பரிய
வரலாற்றினைத் தாங்களே தொகுத்து விடுவர். மேலும் முஹம்மத்(ஸல்) அவர்களுடனான தங்களின் பாரம்பர்ய தொடர்புகளைப் பற்றிய வரலாற்றினைப் பதிவு செய்து வந்தார்கள்.(நபிமொழி அறிவிப்பாளர் தொடர் வரிசை)
ஆரம்ப கால முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் தங்களின் மார்க்கம் மற்றும் அரசியல் சார்ந்த வரலாற்றில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வந்தனர்.
இவர்கள் பெரும்பாலும் நபி(ஸல்) அவர்களின் வரலாற்றையும் முஸ்லிம்களின் வெற்றிகளைப் பற்றியும் எழுதி வந்தார்கள்.அத்துடன் இஸ்லாமியக் கலாச்சாரம், அரசியல் வளர்ச்சி, கலீஃபாக்களின் காலத்தில் அவற்றின் நிலை ஆகியவற்றையும் பதிவு செய்தார்கள்.
நபி(ஸல்) அவர்களைப் பற்றி முதலாவதும் முக்கியத்துவமும் வாய்ந்த வரலாற்றை எழுதியவர் இப்னு இஸ்ஹாக். இவர் எழுதிய நூலின் பெயர்: “The Biography of the Prophet” இதில் நபி(ஸல்) அவர்களுடைய பாரம்பரியம், இஸ்லாத்தின் தோற்றம், வளர்ச்சி போன்றவற்றைப் பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த நூலானது சிறப்பு வாய்ந்ததாகவும் பின்னர் வந்த முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் அந்த நூலில் உள்ள விஷயங்களை சுதந்திரமாக எடுத்தாள்வதற்கும் உரிமை அளிக்கப்பட்டிருந்தது. முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றிய மற்றுமொரு வரலாற்று நூல் இப்னு ஹிஷாம் எழுதிய “Biography of Prophet(Sal)”. இந்த நூலிலுள்ள பெரும்பாலான விஷயங்கள் இப்னு இஸ்ஹாக் உடைய நூலிலிருந்து எடுத்து ஆளப்பட்டவையே.
பெரும்பாலான முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான போர்களையே பதிவு செய்துள்ளார்கள். அப்பாஸிய கலீஃபாக்களின் ஆஸ்தான வரலாற்றாசிரியர் அல் வாஹிதி(747-823) இது பற்றி நிறைய நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் “History of the Wars of the Prophet” எனும் நூல் புகழ் பெற்றது. மற்றுமொரு சிறந்த வரலாற்றாசிரியர் அல்-பலதூரி ஆரம்ப கால முஸ்லிம் வெற்றிகள் பற்றிய ஒரு வரலாற்றுத் தொகுப்பினை “கான்குட்ஸ் ஆப் தி கண்ட்ரீஸ்” எனும் தலைப்பில் எழுதியுள்ளார். இவை தவிர, புகழ் பெற்ற வரலாற்றாசிரியர்களான அல் தினாவரியின் ஹிஸ்டரி ஆப் அரேபியா அண்ட் பர்ஷியா” நூலும் இப்னு அலீ தாஹிரின் “தி ஹிஸ்டரி ஆப் பாக்தாத் அண்ட் இட்ஸ் கலீப்ஸ்” எனும் நூலும் புகழ் பெற்றதாகும்.
இது போல வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் உலகப் புகழ் பெற்ற முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்களையும் அவர்கள் தம் நூல்களையும் இந்த உலகம் கண்டுள்ளது. அவர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டும் இங்கு நினைவு கூர்வது நம்முடைய வரலாறுகளை நமக்குத் தந்த முன்னோர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் அவர்கள் இந்த உலகிற்கு ஆற்றிய சேவைகளைத் தெரிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.
அல்-தபரீ (838-923)

உலகத் தரம் வாய்ந்த முஸ்லிம் வரலாற்றாசிரியர்களில் மிகவும் முதன்மையானவர் இவரே. இவர் எழுதிய “தி அன்னால் ஆப் தி அபோஸ்டல் அண்ட் கிங்ஸ்” எனும் முன்னோர்களைப் பற்றிய வரலாற்று நூல் மிகவும் புகழ் பெற்றதாகும்.
அந்த நூலில் கி.பி. 915 வரை வாழ்ந்த முன்னோர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைப் பதிவு செய்துள்ளார். இதற்காக அவர் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளார்.
மேலும் ஷரீஅத் சட்டத்தில் ஆழ்ந்த அறிவையும் பெற்றுள்ளார். கால அட்டவணையை முறையாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்திய முதல் முஸ்லிம் வரலாற்றாசிரியரும் இவரே. அல் தபரீ வரலாற்று ஆய்விற்காகப் பயன்படுத்திய நெறிமுறைகள் இன்றளவிலும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.
அல் மஸ்ஊதி

மத்திய காலப்பிரிவில் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற முஸ்லிம் வரலாற்றாசிரியர் இவர். மேலும் இவர் சிறந்த Enotclopaedist என்றும் அழைக்கப்படுகிறார். அல் தபரீ பயன்படுத்திய கால அட்டவணையை இவர் மன்னர்கள், ஆட்சி மற்றும் தலைப்புகளின் கீழ் அதனைப் பிரித்து எழுதியுள்ளார்.
இவருடைய நூல்களில் சிறந்தது “Meadow of Gold” ஆகும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இவர் அரசியல் நடவடிக்கைகளைக் குறிப்பிடும் போது அதனுடன் சேர்த்து மக்களுடைய கலாச்சார மற்றும் சமூக வாழ்வினை இணைத்தே வரலாற்றைத் தந்துள்ளார். இவருடைய வரலாற்று ஆய்வுகளில் அனைவராலும் பொறாமை கொள்ளத்தக்க ஓர் ஆய்வு “Herodotus of the Arabs” எனும் நூலாகும்.
மிஸ்காவைஹி
- அரபு வரலாற்று ஆய்வுகள் மிகவும் உச்ச நிலையை அடைந்தது மிஸ் காவைஹியின் எழுத்துகள் மூலமே. ஏனெனில் முன்னர் கூறிய வரலாற்றாசிரியர்களை விட இவர் முதல் தர (நம்பத்தகுந்த) தகவல்களைத் திரட்டுவதில் கைதேர்ந்தவராக இருந்தார்.
தற்போது இதனை Primary Sources என்று கூறுகிறார்கள். குறிப்பாக, நிர்வாகம் மற்றும் இராணுவம் தொடர்பான தகவல்கள். இதனை இவர் எழுதிய “Experiences of the Nations” எனும் நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றுமொரு சிறப்பு, இவருடைய பாரபட்சமற்ற தன்மை. மிகச் சிறந்த முஸ்லிம் ஆட்சியாளர்களின் காலத்தில் இவர் வழங்கிய தீர்ப்புகள் மிகவும் நேர்த்தியானவை.
மிக்ரிஷி (1360-1442)
எகிப்தைப் பற்றி எழுதிய முஸ்லிம் வரலாற்றாசிரியர் தான் மிக்ரிஷி. இவர் எகிப்து முஸ்லிம்களின் வரலாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள புவியியல் அமைப்பு போன்றவற்றைத் தந்துள்ளார். இவர் பாதிம்களுடைய மற்றும் மம்லூக் சுல்தான்களுடைய வரலாற்றையும் எழுதியுள்ளார்.
இவருடைய மற்றுமொரு சிறந்த வரலாற்றுப் பங்களிப்பு “Encyclopaedia of Egyptian Biography” ஆகும். இவர் எழுதிய வரலாற்று நூல்கள் மிகவும் ஆதாரப்பூர்வமானவையாக இருந்த போதிலும் இவர் ஓர் ஆய்வாளர் கிடையாது என்பது தனிச் சிறப்பாகும். ஆயினும் இவர் எழுதிய “இடைக்கால கெய்ரோ” உலகிற்குக் கிடைத்த மிகவும் விரிவான, மதிப்பு வாய்ந்த ஆய்வாகும்.
அல் பிரூனி (973-1048)
முஸ்லிம்களின் பாரம்பர்ய வரலாற்றினை முன்னோர்களின் வரிசைக் கிரமப்படி(chronology) மூலம் ஆய்வு செய்து நூல்கள் வெளியிட்ட மற்றொரு சிறப்புக்குரிய வரலாற்றாசிரியர் தான் அல் பிரூனி. சிலகாலம் இந்தியாவிலும் தங்கியுள்ளார். இந்து கலாச்சாரத்தின் நிலை குறித்து இவர் கி.பி. 1080 -இல் எழுதிய “கிதாபுல் ஹிந்த்” மிகப் புகழ் பெற்றதாகும். இந்துக் கலாச்சாரத்தின் நல்ல – தீய அம்சங்களை அவர் அதில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இவர் செய்த இந்த ஆய்வு ஆரம்பகால சிலைவணங்கிகளின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.
அலீ அல் தனாகி(969-94)
“Collections of Histories” எனும் நூல் மூலம் சிறப்பு பெற்றவர் தனாகி. முஸ்லிம்களுடைய தொடர்புகளைப் பற்றியும் பின்பற்றப்பட்ட வரலாற்று முறைகள் பற்றியும் இவர் எழுதியுள்ளார். “The History of Damascus” எனும் நூலின் மூலம் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் அல் ஹஸன்(1121 – 93) ஆவார்.
வரலாறு என்பது மாறக்கூடிய தன்மை கொண்டது. அதற்கென உள்ள தன் சக்தியின் மூலமே அது வளர்ச்சி பெறுகிறது. மேலும் வரலாற்றில் மாற்றம் என்பது சுழற்சி முறையில் ஏற்படும் என்ற கருத்தில் நம்பிக்கை கொண்டவர். சமூகம் மற்றும் உயிரினங்கள் நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கையே வாழ்கின்றன. ஒரு சமூகம் இரண்டு நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது. ஒன்று ஊரகம்; இரண்டு நகர்ப்புறம். இதில் ஊரகத்திலிருந்து அந்தச் சமூகம் நகரத்திற்கு வரும் போது அதன் உள்ளார்ந்த சக்தி சீரான அளவில் குறைகிறது. இவ்வாறு அதன் சக்தி குறைந்தாலும் கலை, அறிவியல், தொழில்நுட்பம், வாழ்க்கைத் தரம் போன்றவற்றில் அபரிதமான வளர்ச்சியைக் காண்கிறது. அதே நேரத்தில் தனது முரட்டுப் பிடிவாதம் மற்றும் மூர்க்கத்தனத்தை இழக்கிறது. சுருங்கக் கூறின் செல்களின் வளர்ச்சியைப் போல சிலர் பிறப்பதும் பின்னர் இறப்பதும் தத்துவார்த்த முறைகளிலேயே நடைபெறுகிறது என வரலாற்றினை விளக்குகிறார்.
ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடுகின்றன. அதற்கான காரணத்தை அதன் சுற்றுச்சூழல், வானிலை, அந்த நிலத்தின் தன்மை போன்றவற்றின் மூலம் ஆராய முற்படுகிறார் இப்னு கல்தூன். மதத்தின் முக்கியத்துவத்தை அறிந்து வைத்துள்ளார். தூதுத்துவத்திற்கும் மதரீதியான ஆளுமைகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார். வரலாற்றுக்கான தெய்வீகக் காரணங்களை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் தனது “Universal History” எனும் நூலில் தருகிறார். பேராசிரியர் பர்னஸ் இவரைப் பற்றி கூறும் போது, “மத்திய கால வரலாற்று வரைவியலாளர்களில் இப்னு கல்தூன் ரோஜர் பேகனாக இருந்தார்”.
பேராசிரியர் ராபர்ட் பிளிண்ட் கூறுகையில், “இப்னு கல்தூன் வரலாற்று வரைவியலுக்கு மிகப் பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார். வரலாற்றை சிறப்பு அறிவியலாக மாற்றிய பெருமை இப்னு கல்தூனுக்கு உண்டு” என்கிறார்.
இவருடன் மத்திய காலப் பிரிவில் (அ) இடைக் காலத்தில் வாழ்ந்த மற்ற புகழ் பெற்ற முஸ்லிம் வரலாற்றாசிரியர்களில் சுல்தான் ஸலாஹுத்தீன் வரலாற்றை எழுதிய பஹாஅத்தீன், உலகப் புகழ் பெற்ற முஸ்லிம்களின் வரலாற்றை எழுதிய இப்னு சவாது, அறிஞர்களின் அகராதி எழுதிய யாகூத், வரலாற்று அகராதி எழுதிய இப்னு கல்லிக்கன் போன்றோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இப்னு கல்லிக்கன் சுமார் 865 புகழ்பெற்ற முஸ்லிம்களைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துள்ளார்.
நவீன கால வரலாற்றாசிரியர்களில் இந்தியாவைச் சேர்ந்த முஹம்மத் இக்பால் குறிப்பிடத்தகுந்தவர். வரலாற்றின் பொருள் மற்றும் தன்மை குறித்து இவர் தனது The Reconstruction of Religious Thought in Islam (1930)எனும் நூலில் விளக்கியுள்ளார். வரலாற்றின் முக்கியத்துவம் கடவுளிடம் மனிதனை இணைப்பது தான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். தனித்தன்மைக்கு வரலாற்றில் மிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இறைவன் தான் இந்த உலகைப் படைத்து மனிதன் வாழ்வதற்கான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளான் என்பதில் உறுதி கொண்டிருந்தார்.
இவரைப் போல இன்னும் பல முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் இந்த உலகிற்குப் பல நன்மைகளைச் செய்துள்ளார்கள். இவர்களைப் போன்ற ஆராய்ச்சியாளர்கள் இந்த முஸ்லிம் உம்மத்தில் இன்றைய இளைஞர்களிலிருந்து உருவாக வல்ல இறைவன் அருள்பாலிப்பானாக.

No comments:
Post a Comment