Wednesday, April 27, 2011

புகைப்படத்துறையின் புதிய பரிணாமம் : சொக்க வைக்கும் படங்கள் இணைப்பு!



மனிதனுடைய சத்தியத்தின் மூலம் அல்லாஹ்வின் சோதனை!

“ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்றால், நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதனங்களாக்கிக் கொள்ளாதீர்கள்। நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பது எல்லாம் இதன் மூலமாகத்தான்...” (அல்குர்ஆன்:16:92)
இந்த மாதம்
பெயர் : மார்க்கோனி
பிறந்த தேதி : ஏப்ரல் 25, 1874
வானொலியைக் கண்டு பிடித்தவர்.
"வானொலியின் தந்தை" எனப்படுபவர்.
1909  இல் இயற்பியலுக்கான நோபல்
பரிசை  Karl Ferdinand Braun இடன்
இணைந்து பெற்றார்.1890 மார்க்கோனிக்குக்
கம்பியிலாத் தொலைத் தொடர்பில் ஆர்வம் ஏற்பட்டு
ஆழ்ந்து ஆய்வுகள் செய்து வந்தார். இருபத்தி ஒன்றாம்
வயதில் 1895 முதன் முதலில் ஓரிரு மைல் தூரத்தில்
'திசைதிரும்பும் மின்கம்பம் [Directional Antenna]
மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றியும் பெற்றார்.
1937 இல் இவர் காலமான போது உலக வானொலி நிலையங்கள் 
அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.

சிந்தனை
அறிவை வளர்க்கும் செய்தியை தினமும் தேடிப் படிக்க வேண்டும்
என்றும் நம்மை விட்டு செல்லாதது அறிவு மட்டும் தான்.
பல வியாதிகளை தண்ணீரால் குணப்படுத்தலாம்
தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது. 

1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். 

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது. 

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய மற்றும் இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம்.

5. முதியோர், நோயாளிகள் மற்றும் 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம். 

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்கள் பின்வருமாறு: 

உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள். 

வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்.

சர்க்கரை வியாதி - 30 நாட்கள். 

புற்றுநோய் - 180 நாட்கள். 

காசநோய் - 90 நாட்கள்

தகவல்

புகைப்படத்துறையின் புதிய பரிணாமம் : சொக்க வைக்கும் படங்கள் இணைப்பு!

இது ஒரு புகைப் படத்தை விட சற்று அதிகமானது. ஆனால் வீடியோக் காட்சியை விட கொஞ்சம் குறைவானது…உங்களது விஷேட நிகழ்வுகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு விஷேட புதிய கலையை இரண்டு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இவை அசைவுகளுடன் கூடிய படங்கள். இந்தப் புதிய புகைப்படக் கலையின் மூலம் எடுக்கப்படும் படங்கள் நிழற்படங்களைப் போன்று தான் இருக்கும்.
ஆனால் அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அசைவுகளைக் காணலாம். அந்த வினோதமான அசைவு நிச்சயம் உங்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும். ஜெமிபெக் மற்றும் அவரின் சகாவான கெவின் பேர்க் ஆகியோர் இணைந்து இந்த எனிமேஷன் போட்டோ கிராபியை உருவாக்கி உள்ளனர். ஒரு படத்தில் சன நெரிசல் மிக்க ஒரு வீதியில் ஒருவர் தனது பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.
இன்னொரு படத்தில் ஒரு சிற்றுண்டிச் சாலைக்கு வெளிப்பகுதியில் வாகனம் ஒன்று வேகமாகச் செல்வது சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு படத்தின் ஏதாவது ஒரு குறிப்பிட்டப் பகுதிதான் அசையும். ஆனால் அது நிச்சயம் பார்ப்பவர்களைக் கவரும், அவர்களின் கவனத்தையும் ஈர்க்கும். அது தான் இந்தப படக்கலையின் விஷேட அம்சம்.

Post Comment

No comments:

Post a Comment