Wednesday, June 8, 2011

இரானுக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம்?


ஈரான் நாட்டின் மகளிர் கால்பந்தாட்ட அணி ஒலிம்பிக் போட்டியின் தகுது சுற்றில் இருந்து வெளியேற்ற பட்டுள்ளது.இது தோல்வியால் அல்ல மாறாக இந்த பெண்கள் இஸ்லாமிய ஹிஜாப் அணிந்து விளையாட கூடாதாம் . இது செய்தி ,ஏன் இதை  இந்தியாவுல சொல்லணும் நம்ம நாட்டு பிரச்சனைகள் பத்தாதா அப்படின்னு தானே யோசிக்கிறீங்க.இல்ல ஆரம்பிச்சுட்டான் மதத்தை பத்தி பேசன்னு நினைக்குரின்களா ?இல்லை நான் எந்த மதமும் சம்மதம் இல்லாதவன்.நான் மார்க்கத்தை பேணி நடக்கும் (முயற்ச்சிக்கும் ) மனிதன். சோ என்னதான் உளருரேன்னு படிச்சு பாருங்க சரியா .............


பெண்களை இந்த விளையாட்டு போட்டிகளில் இருந்து வெளியேற்றியது ஒலிம்பிக் குழுவா அல்லது அவர்களின் மதமா?அந்த பெண்களின் மதம் அவர்களை தலையங்கியுடன்  விளையாட அனுமதி அளித்துள்ளது ஆனால் தலையங்கியுடன் விளையாட அனுமதி அளிக்காதது ஒலிம்பிக் குழு தான். 
தலையங்கி இல்லாமல் விளையாடும் பெண்களை எதுன்னை வக்கிர கண்கள்   பார்வையாலும் சில்மிஷங்களாலும் கற்பழித்து வருகிறது என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. யு டுபில் இருக்கும் வக்கிர வீடியோ காட்சிகள் சாட்சிக்கு போதுமானதாக இருக்கிறது . 


பொதுவாகவே கொஞ்சம் அவங்க அவங்க வேதங்களில் உள்ள செய்திய கொஞ்சம் புரட்டி பாருங்க .நான் புரட்டியதில் இந்த தலைப்புக்கு சம்பந்தம் உள்ள சில உங்கள் பார்வைக்கு 

ரிக் வேதம் பாகம் 8 ஹைம் 33 வசனம் 19 
ரிக் வேதம் பாகம் 10௦ ஹைம் 85 வசனம் 30௦ 
                     பெண்களின் உடை மற்றும் தலையங்கி அணிதல் மேலும் கண்ணியமாக நடந்து கொள்ளுதல் பற்றி சொல்கிறது 

பைபிள் டயு ட்டேரானம்மி  பாகம் 22 வசனம் 5 

                     பெண்கள் தலையங்கி அணிய வேண்டும் என சொல்கிறது ...
மேலும் ஓரிடத்தில்(அந்த வசனம் மறந்துவிட்டது மன்னிக்கவும்  )பெண்கள் தலையங்கி அணியாவிட்டால் அவர்களுக்கு மொட்டை அடித்து தண்டிக்க வேண்டும் எனவும் கூறுகிறது ..

நம்ம நம்ம வேர்கள் இவ்வாறு இருக்க நாம் இதையெல்லாம் மறந்தும் மறக்கடிக்க பட்டும் இருக்கிறோம் ..மறக்காமல் உலகில் அதிமாக பின்பற்றப்படும் (the most practicing religion) ஒரு மதத்தினரை குறி வைத்து இப்படி தாக்குதல் நடத்துவதில் யாருக்கு என்ன லாபம்.இவர்களும் தங்கள் வேதங்களை விட்டு விலகி வரவேண்டும் என்ற நயவஞ்சகம் தான் இது.

சரி நம்ம நம்ம வீட்டுல வேத புத்தகங்கள் இருக்கா? 


       எங்க சார் இருக்கு இருதிருந்தால் இன்னைக்கு எல்லா பெண்களும் தலையங்கியுடன் காட்சி தருவார்கள் ,உலகமே ஒரே கொள்கையோட ஒற்றுமையா இருந்திருக்கும். ஒரு சாரார் படிக்க தான் வேதம் என்றும் அவர்கள் படித்து சொல்வது தான் வாக்கு என்றும் சொல்லி சொல்லியே நம்மை சோம்பேறிகளாகி ஜாதி மதம் என்று பிரித்து கொல்றாங்க.இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.

ராமர் , இயேசு மொகம்மது இவர்கள் அனைவர்கள் மீதும் கட்டுகதைகள் யார் சொன்னாலும் நம்பி விடுகிறோம்.உடனே உண்டியலை குலுக்கி கோடிகளை குவித்து விடுகிறார்கள் போலி மதவாதிகள்.

போதும் இதற்கு தயவு செய்து முற்றுபுள்ளி வையுங்கள் அணைத்து வேதங்களையும் படிக்கச் சுலபமான வழிகள் பல இருக்கு ஆனா அதில் சுவாரசியம் கம்மி சோ நம்ம செய்யவே மாட்டோம். 

ஒரு நாத்திக வாதியின் வலைப்பக்கத்தில் போய் வேதம் படிக்க நினைக்காதிங்க அங்கே நமக்கு மேலும் குழப்பமே மிஞ்சும்.தெளிவான மனநிலையுடன் (குற்றம் கண்டுபிடிக்கவே சிலர் படிப்பதுண்டு) நமக்கு நாமே படித்து புரிந்தால் இறைவனை காணலாம் இன்புற்று வாழலாம்.இதுவரை நாம் செய்து வந்த தவறுகள் கூட புரியும் .

நம்ம உடம்புக்கு நோய் வந்தால் டாக்டர்கிட்ட தான் போகணும்.இது காலங் காலமாய் நம்ம உள்ளத்தை ஆட்கொண்டுள்ள நோய் இதற்கு இறைவனின் மாசற்ற வார்த்தைகள் (கட்டளைகள்) மூலமே நிவாரணம் கிட்டும் .
                 

Post Comment

No comments:

Post a Comment