மரணத்திற்குப்பின் வரக்கூடிய இந்த நாளை பயந்து, உலகில் வாழக்கூடிய நாட்களை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளல்!
இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது, அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 2:48)
இந்த மாதம்
பெயர் : இரவீந்திரநாத் தாகூர்,
பிறந்த தேதி : மே 7, 1861
புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார்.
இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன
பாடலை இயற்றியவர். இவர் மக்களால் அன்பாக
குருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய
மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின்
தேசிய கீதமாக உள்ளது. கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக
இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார்.
வரலாற்றில் இன்று
1503 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் கேமான் தீவுகளை அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார்.
1612 - ஷாஜகான் மன்னன் மும்தாஜ் மஹாலைத் திருமணம் புரிந்தான்.
1768 - மூன்றாம் ஜோர்ஜ் மன்னனைப் பெரிதும் குறை கூறி ஜோன் வில்க்ஸ் என்பவர் எழுதிய கட்டுரையை அடுத்து அவர் சிறைப் பிடிக்கப்பட்டார். இதை அடுத்து லண்டனில் பெரும் கலவரம் மூண்டது.
1774 - பதினாறாம் லூயி பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.
1796 - ரஷ்யப் படைகள் தாகெஸ்தான் குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டனர்.
1796 - பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளுக்கெதிரான போரில் பெரும் வெற்றி பெற்றான். 2,000 ஆஸ்திரியர்கள் வரையில் கொல்லப்பட்டனர்.
1810 - ஆர்ஜெண்டீனாவின் தலைநகரான புவெனஸ் அயரெஸ் நகர மண்டபத்தை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
1857 - சிப்பாய்க் கிளர்ச்சி: இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் என்ற இடத்தில் சிப்பாய்கள் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.
1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்கக் கூட்டுப் படைகளினால் ஜோர்ஜியாவில் கைப்பற்றப்பட்டார்.
1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தளபதியான வில்லியம் குவாண்ட்ரில் என்பவரை கென்டக்கி என்ற இடத்தில் தாக்கி படுகாயப்படுத்தினர். இவர் ஜூன் 6 இல் இறந்தார்.
1871 - பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடையில் இடையிலான போர் பிரான்ஸ் சரணடைந்ததுடன் முடிவுக்கு வந்தது.
1877 - ருமேனியா துருக்கியிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1908 - அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது.
1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது குண்டு இங்கிலாந்தில் கெண்ட் பகுதியில் வீழ்ந்தது.
1940 - இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய நாடுகளுக்குள் ஜெர்மனி ஊடுருவியது.
1940 - வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.
1940 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஐஸ்லாந்தினுள் ஊடுருவியது.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் வான்படையின் தாக்குதலில் லண்டனில் கீழவை நாடாளுமன்றம் (House of Commons) சேதத்துக்குள்ளாகியது.
1946 - ஜவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானர்.
1979 - மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் சுயாட்சி பெற்றன.
1993 - தாய்லாந்தில் விளையாடுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் பெரும்பான்மையாக இளம் பெண்கள் அடங்கிய 188 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1994 - நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்.
1996 - எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்ற கடும் புயலில் சிக்கி 8 மலையேறிகள் கொல்லப்பட்டனர்.
1997 - ஈரானில் ஆர்டேக்குல் அருகே நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,400 பேர் உயிரிழந்தனர்.
2001 - கானாவில் கால்ப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 120 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.
கணனி உலகம்
இணைய தளப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்திடும் காம்ஸ்கோர் நிறுவனம், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் எடுத்த ஆய்வு முடிவுகளை அறிவித்துள்ளது.
இதன்படி, இணையத்தில் யார் அதிக நேரம் உலா வருபவர்கள் தெரியுமா? அமெரிக்கர்களா? பிரிட்டிஷ்காரர்களா? சீன அல்லது இந்தியக் குடிமக்களா? இவர்கள் யாரும் இல்லை.
கனடா நாட்டு மக்கள் தான் அதிக நேரம் இணையத்தில் உள்ளனர். 2010 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஒவ்வொருவரும் சராசரியாக 43.5 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர்.
இது பன்னாட்டளவிலான சராசரி நேரத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். இவர்களில் பெரும்பாலானவர் களின் வயது 55க்கும் மேல் என்பது இன்னொரு வியத்தகு செய்தி. 2009 ஆம் ஆண்டிலும் இதே பெருமையை கனடா தட்டிச் சென்றது.
தற்போது கனடாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் 2 கோடியே 30 லட்சம் பேர் உள்ளனர். இதே காலத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் 35.5 மணி நேரமும், பிரிட்டிஷ் நாட்டவர் 32.3 மணி நேரமும், தென் கொரியாவினைச் சேர்ந்தவர்கள் 27.7 மணி நேரமும் இணையத்தில் இருந்துள்ளனர்.
இந்திய இணையம் குறித்து இங்கே பார்க்கலாமா! மொபைல் பயன்பாடு வளர்ந்த அளவிற்கு, இந்தியாவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு வளரவில்லை என்பது பலரின் கவலைக்கான விஷயமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.
இருப்பினும் இப்போது இந்நிலை மாறத் தொடங்கி உள்ளது. சென்ற டிசம்பர் மாதத்திலிருந்து பார்க்கையில் வளர்ச்சி சற்று வேகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. ஒரு கோடியே 9 லட்சத்து 20 ஆயிரமாக இருந்த பிராட்பேண்ட் இணைப்பு, 2.7% உயர்ந்து, ஒரு கோடியே 12 லட்சத்து 10 ஆயிரமாக வளர்ந்துள்ளது.
மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 77 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்களில் நகரங்களில் பயன்படுத்துபவர்கள் 51.23 கோடி. கிராமப் புறங்களில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களில், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் முதல் மூன்று இடத்தைப் பெற்றுள்ளன. காம் ஸ்கோர் நிறுவனத்தின் கணக்குப் படி, ஒரு நேரத்தில் சராசரியாக, 3 கோடியே 2 லட்சம் பேர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கின்றனர்.
இவர்களில் 72% பேர் வீடியோ படங்களை இணையத்தில் பார்க்கின்றனர். இவர்கள் சராசரியாக 58 படங்களைப் பார்க்கின்றனர். 5 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர்.
யு ட்யூப் தளத்தில் பார்க்கப்படும் இணைய வீடியோக்களில் 44.5 % இந்தியாவில் பார்க்கப்படுகின்றன. 78 கோடி தடவை இவை காணப்படுகின்றன. பேஸ்புக் சோஷியல் தளத்தில்66 லட்சம் பேர் பதிந்துள்ளனர். இவர்கள் 3 கோடி@ய ஒரு லட்சம் வீடியோ படங்களைப் பார்த்துள்ளனர்.
தகவல் களம்
+2 தேர்வு முடிவு: மலர்ந்தும் மணக்காத முஸ்லிம் மொட்டுக்கள்!. கவலை தரும் ஓர் ஆய்வு!.
இன்னுமா நீ உறங்குகின்றாய்?.
சுமார் எட்டு இலட்சம் மாணவ மாணவியர்கள் இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வை எழுதினர். பன்னிரண்டாம் வகுப்பின் தேர்வானது மிக முக்கியம் வாய்ந்தது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை மருத்துவராகவும், பொறியாலராகவும் மாற்ற எடுத்த சிரமங்களுக்கு முடிவு தெரியும் நாளாகும் இது. அதே சமயம் சில மாணவ மாணவிகளுக்கு தங்களின் பள்ளி படிப்பை இத்தோடு நிறுத்திவிடும் நாளாகவும் இந்த தினம் அமைந்து விடுகின்றது. குறிப்பாக முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு இது நூறு சதவிகிதம் பொருந்தும் என்றால் அது மிகையாகாது. இந்த ஆண்டு வெளியான தேர்வு முடிவுகளை ஆராயும் போது, தேர்வின் முடிவுகள் நமக்கு கவலையை அளிக்கின்றது. குறிப்பாக முஸ்லிம் மாணவ மாணவிகள் யாருமே முதல் மூன்று இடங்களை நிரப்பவில்லை!.
முதல் இடம்:
1200க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று ஓசூர் மாணவி கே.ரேகா முதலிடம் பெற்றார். மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 195, ஆங்கிலம் 195, கணிதம் 200, இயற்பியல் 200, வேதியியல் 200, உயிரியல் 200
குறிப்பு:
பிளஸ்டூ வில் 1191 மதிப்பெண்கள் பெற்ற சென்னை குரோம்பேட்டை மாணவி சந்தியாதான் தமிழகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்றவராவார். ஆனால் அவர் தமிழை முதல் பாடமாக எடுக்காமல், சமஸ்கிருதத்தை முதல் பாடமாக எடுத்திருந்தார். இதனால் இவருக்கு மாநில அளவிலான ரேங்கிங் கிடைக்காமல் போய்விட்டது. தமிழை முதல் பாடமாக எடுத்து அதிக மதிப்பெண் பெற்றால்தான் முதலிடம் கொடுக்கப்படுகிறது.
அதே போன்று பிரஞ்சு மொழியை எடுத்து படித்தவர்களில் வித்யோதயா மாணவி ஜெயப்பிரதா 1190 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
3வது இடத்தை பிரெஞ்சு மொழியை முதல் பாடமாக எடுத்துப் படித்தவரான சென்னை அருகே உள்ள கீழ்க்கட்டளையைச் சேர்ந்த எச்.எப்.சி பள்ளி மாணவி மகாலட்சுமி பிடித்துள்ளார். இவர் எடுத்த மதிப்பெண்கள் 1189 ஆகும்
இரண்டாம் இடம்:
கள்ளக்குறிச்சி மாணவன் வேல்முருகன் 1187 மதிப்பெண்களுடன் 2ஆம் இடம் பிடித்தார்.
மூன்றாம் இடங்கள்:
4 மாணவர்கள் 1186 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3வது இடத்தைப் பிடித்தனர். நெல்லை மாணவி வித்ய சகுந்தலா, பெரியகுளம் ரகுநாதன், நாமக்கல் சிந்துகவி, ஓசூர் பி.எஸ்.ரேகாவும் 3வது இடத்தை பிடித்தனர்
200க்கு 200 எடுதவர்களின் எண்ணிக்கை:
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 223 பேர்
தாவரவியல் பாடத்தில் 4 பேர்
கணித அறிவியலில் 223 பேர்
உயிரியலில் 615 பேர்
இயற்பியலில் 646 பேர்
வேதியியலில் 1243 பேர்
கணிதத்தில் 2720 பேர்
விலங்கியலில் யாரும் 200 மார்க் பெறவில்லை
இதற்கிடையே தோல்வியுற்ற மாணவ மாணவிகள் நன்றாக தேர்வு எழுதியும், தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் நம்பிக்கை இல்லை என்றால், அவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவும், விடை தாள்களின் நகல் கோரியும் விண்ணப்பிக்க விரும்புவோர் வருகிற 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை அதைச் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி) புதுச்சேரி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறலாம்.
விடைத்தாள் நகல் பெறுவதற்கு, மொழிப்பாடம் மாற்றும் ஆங்கிலத் தாள் ஒவ்வொன்றுக்கும், தலா, 550 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு, 275 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.
25ம் தேதி மதிப்பெண் பட்டியல்:
வருகிற 25ம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் மதிப்பெண் பட்டியல் விநியோகிக்கப்படும்.
தர வரிசை மட்டுமல்லாது, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற அணைத்து மாணவ மாணவிகளுக்கும் நம் வாழ்துக்கள்!. தோல்வி அடைந்தவர்கள் மறுதேர்தலில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றிபெற மீண்டும் உங்களுக்கு வாய்ப்புள்ளதால், இப்போதிலிருந்தே அதற்கு ஆயத்தமாகுங்கள்!.
குறிப்பாக மூன்றாம் இடத்தை நான்கு பேர்கள் அடைந்துள்ளனர். அதில் கூட ஒரு முஸ்லிம் இல்லை. இந்த முடிவை முஸ்லிம்கள் சுயபரிசோதனை செய்யவேண்டும். கல்வியில் நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்று ஆராயவேண்டியதும் நம் கடமை. வெற்றி பெற்ற மற்ற மாணவ மாணவிகளிடம் இருந்து இந்த ஆண்டு தேர்வு எழுத உள்ள முஸ்லிம் மாணவ மாணவிகள் பாடம் படிக்கவேண்டும். இவர்கள் எவ்வாறு சாதித்தார்கள் என்று ஆராயவேண்டும். குறிப்பாக முஸ்லிம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
ஏதோ அத்தி பூத்தாற்போல் சில சமயங்களில் யாஸ்மீன் போன்ற சில மாணவிகள் வெளிச்சத்திற்கு வந்தாலும் மீதம் உள்ள மாணவர்கள் நிலையை மேம்படுத்திட, இந்த சமுதாயம் கல்வியில் இன்னும் பல மைல்கல் கடக்க வேண்டியுள்ளது. நம் சகோதர இயக்கங்களும் இந்த நிலைமையை ஆராய்ந்து, இந்த ஆண்டு தங்களின் களப்பணிகளை கல்விக்கென்று முன்னுரிமை கொடுத்து, தங்களின் செயல்பாடுகளை அமைக்க வேண்டும் என்று இந்த சமுதாயத்தின் ஒற்றை கோரிக்கையாக உங்களின் முன் வைக்கின்றது.

No comments:
Post a Comment