சனிக்கிழமையை விடுமுறை நாளாகக் கொண்ட யூதர்கள், இறை வரம்பை மீறி தனக்குத்தானே அநீதி இழைத்தனர்!
உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக்கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம். இன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும், பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம். (அல்குர்ஆன்: 2:65-66)
இந்த மாதம்
பக்ருதின் அலி அகமது
பிறந்த நாள்: 13 மே 1905
இறந்த நாள்: 11 பிப்ரவரி 1977
பிறந்த இடம்: தில்லி, இந்தியா
இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவி வரிசை: 5 ஆவது குடியரசுத் தலைவர்
பதவி ஏற்பு: 24 ஆகஸ்ட் 1974
பதவி நிறைவு: 11 பிப்ரவரி 1977
முன்பு பதவி வகித்தவர்: வி. வி. கிரி
தற்காலிகமாக அடுத்து பதவி ஏற்றவர்: பஸப்பா தனப்பா ஜட்டி
அடுத்து பதவி ஏற்றவர்: நீலம் சஞ்சீவி ரெட்டி
வரலாற்றில் இன்று
1502 - கொலம்பஸ் தனது கடைசியும் கடைசியுமான கடற் பயணத்தை மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆரம்பித்தார்.
1812 - லண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவல் ஜோன் பெல்லிங்ஹம் என்பவனால் கொல்லப்பட்டார்.
1857 - இந்தியக் கிளர்ச்சி, 1857: இந்தியப் புரட்சியாளர்கள் டெல்லியை பிரித்தானியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
1867 - லக்சம்பேர்க் விடுதலை அடைந்தது.
1891 - ஜப்பானில் பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய மன்னர் இரண்டாம் நிக்கலாஸ் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
1905 - அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.
1924 - மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது.
1943 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் அலூசியன் தீவுகளின் அட்டு தீவைக் கைப்பற்றினர்.
1949 - சியாம் நாடு தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1949 - ஐக்கிய நாடுகள் அவையில் இசுரேல் இணைந்தது
1953 - டெக்சாசில் இடம்பெற்ற சூறாவளியில் 114 பேர் உயிரிழந்தனர்.
1960 - முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமானது.
1985 - இங்கிலாந்தில் கால்ப்பந்தாட்ட போட்டியொன்றில் அரங்கில் இடம்பெற்ற தீயினால் 56 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.
1987 - முதலாவது இதய மாற்றுச் சத்திர சிகிச்சை மேரிலாந்தில் நடத்தப்பட்டது.
1997 - ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி முதன் முதலாக காரி காஸ்பரவை சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்தது.
1998 - இந்தியா போஹரனில் (Pohran) மூன்று அணுச் சோதனையை நடாத்தியது.
கணனி உலகம்
Comodo Internet Security Pro 2011 ஒரு வருடத்திற்கான
ஆண்டிவைரஸ் மென்பொருள் கணினியில் இருக்கவேண்டிய கட்டாயமான மென்பொருள்களில் ஒன்றாகும். ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவிய உடனே ட்ரைவர் இன்ஸ்டால் செய்கிறோமோ இல்லையோ ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளை நிறுவிவிடுவோம். இதற்கு காரணம் நம்முடைய கணினிக்கு வைரஸ் தொல்லைகள் ஏற்படாமல் இருப்பதற்காக, ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் மற்றும் இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருள்கள் யாவும், பணம் கொடுத்தே வாங்கள் வேண்டும். ஒரு சில மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கிறது. ஆனால் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பயனளிக்க கூடியது ஆகும். ஆனால் Comodo Internet Security Pro 2011 என்ற மென்பொருள் ஒரு வருடத்திற்கு இலவசமாகவே வழங்குகிறனர்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை பயன்படுத்தி கொள்ளவும். இணைய இணைப்பு இருக்கும் கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய இணைய செக்யூரிட்டி மென்பொருள் ஆகும். இணைய இணைப்பு இருக்கு கணினியில் ஏற்கனவே ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருள் இன்ஸ்டால் செய்திரிப்பீர்கள். ஆனாலும் கூடுதலாக இந்த இணைய செக்யூரிட்டி மென்பொருளையும் நிறுவிக்கொள்ளுங்கள். இதனால் உங்களுடைய கணினிக்கு பாதுகாப்புதான்.
இந்த மென்பொருளை பயன்படுத்துவதால் நீங்கள் வைரஸ் தொல்லைகளில் இருந்து தப்பிக்க முடியும். இந்த மென்பொருளுடைய சந்தைவிலை $49.99 ஆகும். இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி(சர்வீஸ்பேக் 2), விஸ்டா மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி போன்ற இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளை சாதரணமாக இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். இதற்குகென எந்தவித லைசன்ஸ் கீயும் கிடையாது.
தகவல் களம்
ஆபத்தின் விளிம்பில் ஏர்வாடி மனநோயாளிகள்
ராமநாதபுரம்: அரசு காப்பகம் அமைப்பதில் தாமதம் ஆவதால், ஏர்வாடி தர்ஹா மனநோயாளிகள் மீண்டும் அடிமை நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் கடந்த 2002 ஆக.,6ல் நாட்டையே உலுக்கிய தீவிபத்து நடந்தது. 28 மனநோயாளிகள் தீயில் கருகினர். மனநோயாளிகளுக்கான காப்பகத்தை குடிசைத்தொழில் போல் பலரும் நடத்தியதே விபத்திற்கு காரணமானது. அங்கு மனநோயாளிகள் சங்கிலியால் கட்டப்பட்டதால் தப்பிக்க வழியின்றி, அத்தனை உயிர்களும் அநியாயமாக பலியாயின. வழக்கம் போல அசம்பாவிதம் நிகழ்ந்த பிறகே அரசு தரப்பு விழித்துக் கொண்டது. அவசரமாக அனைத்து மனநல காப்பகங்களையும் ஒழுங்குபடுத்த முன்வந்தது. அரசே மனநலகாப்பகம் அமைக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்தனர். காப்பகங்களை அமைக்க எந்த துறையின் கீழ் இப்பணியை மேற்கொள்வது என்ற சந்தேகம் அப்போது எழுந்தது. இதுவே அரசு காப்பக பணிகள் முடங்க முதல் காரணமானது. இப்பிரச்னையில் அமைக்கப்பட்ட ராமதாஸ் கமிஷனின் பரிந்துரையின் படி, மாவட்ட மருத்துவமனையில் மனநலபிரிவு தொடங்க, கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி மனநலபிரிவும் ஏற்படுத்தப்பட்டும், அரசு காப்பகம் இல்லாததால் அது பயனின்றி இன்றி உள்ளது.
இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 10 ஆயிரம் மனநோயாளிகளுக்கு ஒருவர், என்ற விகிதத்தில்தான் மனநல மருத்துவர் எண்ணிக்கை உள்ளது. இந்நிலையில் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பது எட்டாக் கனியே. மனநோயாளிகளை காப்பகம் மூலம் பராமரிப்பதை தவிர, பெரிய அளவில் தீர்வு காணமுடியாது. தர்ஹா தலைவர் சார்பில் நிலம் அளித்து காப்பகம் நடத்த முன்வந்த நிலையில், இதுவரை அதற்கான எந்த பணியும் நடக்கவில்லை. உள்பிரச்னை காரணமாக தர்ஹா நிர்வாகம் கோர்ட் விசாரணையில் உள்ளது. இதனால் நிர்வாகிகள் இன்றி தர்ஹா செயல்படுகிறது. இந்நிலை ஆறு மாதமாக தொடர்வதால், மனநோயாளிகள் சிதறிப்போக காரணமானது. இதைப்பயன்படுத்தி மீண்டும் குடிசைத்தொழில் மனநலகாப்பகங்கள் முளைக்கத் துவங்கிவிட்டன. தர்ஹா உள்ளேயே மீண்டும் சங்கிலியால் மனநோயாளிகளை கட்டத்தொடங்கி உள்ளனர். மீண்டும் அடிமை நிலைக்கு திரும்பியுள்ள ஏர்வாடி தர்ஹா மனநோயாளிகளுக்கு, இதனால் பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மனநோயாளிகள் போர்வையில் குற்றவாளிகள்: முறையான கண்காணிப்பு இல்லாததால் மனநோயாளிகள் போர்வையில் நிறைய குற்றவாளிகள் தஞ்சம் அடைந்திருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
ஏர்வாடி தர்ஹா யாத்திரிகர் நலப்பேரவை தலைவர் அம்ஜத் உசேன் கூறியதாவது: கண்காணிப்பு இல்லாமல் மனநோயாளிகள் போர்வையில் குற்றவாளிகள் அதிகம் தஞ்சம் அடைகின்றனர். கேரள போலீசார் பலமுறை வந்து இங்கு குற்றவாளிகளை கைது செய்து சென்றுள்ளனர். மனநோயாளிகளை மீண்டும் சங்கிலியால் கட்டி சித்திரவதை செய்யத்தொடங்கிவிட்டனர். காப்பாகம் அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. தர்ஹா நிர்வாகம் செயல்பட்டால் இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கும், என்றார்.
விதிமுறையால் தாமதமாகும் காப்பகம் : அரசு தரப்பில் காப்பகம் அமைப்பதற்கான முறையான விதிமுறைகள் இல்லாததே தாமத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. தர்ஹா நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் முகமது அமீர் ஹம்சா கூறியதாவது: காப்பாகத்திற்கு நிலம் வழங்குவதாக ஏற்கனவே நாங்கள் கோர்ட்டில் அறிவித்துவிட்டோம். காப்பகம் அமைக்கும் விதிமுறைகள் கேட்டுள்ள நிலையில், இதுவரை கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுக்கு பின் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தர்ஹாவில் மனநோயாளிகளை சங்கிலியால் கட்டுவதை நாங்கள் அனுமதிப்பதில்லை, என்றார்.

No comments:
Post a Comment