அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியத்தை உறுதிபடுத்திய பின்னர் அதை முறிக்காதிருத்தல்!
இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியம் செய்து, அதனை உறுதிப்படுத்திய பின்னர் அச்சத்தியத்தை முறிக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான். நீங்கள் (சத்தியத்தை முறிக்கும் விசயத்தில் நூலை நூற்று நன்கு முறுக்கேறிய பின் அதை துண்டு துண்டாக்கிவிடும் (மதிகெட்ட) பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள். (அல்குர்ஆன்:16:91,92)
இந்த மாதம்
ஆர். பிரேமதாசா
இலங்கையின் 3வது சனாதிபதி
பதவியில்
ஜனவரி 2 1989 – மே 1 1993
முன்னவர் ஜே.ஆர்.
பின்வந்தவர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா
இலங்கையின் 11வது பிரதமர்
பதவியில்
February 6, 1978 – March 3, 1989
முன்னவர் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
பின்வந்தவர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
பிறப்பு ஜூன் 23, 1924
இலங்கை
இறப்பு மே 1 1993
கொழும்பு
வாழ்க்கைத்
துணை கேமா பிரேமதாசா
சமயம் பௌத்தம்
வரலாற்றில் இன்று
மே 1: மே நாள்
1840 - உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.
1886 - ஐக்கிய அமெரிக்காவில் 8-மணிநேர வேலை நாளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1993 - இலங்கை அரசுத்தலைவர் ஆர். பிரேமதாசா (படம்) மே நாள் பேரணியில் வைத்து மனிதக் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்
உங்களுக்குத் தெரியுமா?
அணுக்கதிர் வீச்சால்கூட பாதிக்கப்படாத ஒரே உயிரினம் கரப்பான் பூச்சி
கல்வி
ஐ.டி., துறையில் பிரகாசமான வாய்ப்பு இருக்கு
இனி வரும் பத்தாண்டுகளில் ஐ.டி., துறையில் 75 லட்சம் பணி வாய்ப்புகள் உள்ளன. அதாவது, ஓராண்டுக்கு 7.5 லட்சம் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர், என பிரபல ஆடிட்டர் கணேஷ் மகாதேவன் பேசினார்.
ஐ.டி., துறையின் தற்போதைய போக்கு குறித்து டி.சி.எஸ்., நிறுவனத்தை சேர்ந்த கணேஷ் மகாதேவன் பேசியதாவது:
அனைத்து துறைகளிலும் ஏற்றத்தாழ்வு உண்டு. 2008-09ம் ஆண்டுகளில் இத்துறை பின்தங்கியது; தற்போது மீண்டும் மேலெழுந்து உள்ளது. பி.இ., படித்தவர்கள் என்றில்லாமல், பி.ஏ., பி.எஸ்.சி., சி.ஏ., என எந்த படிப்பு படித்தவர்களுக்கும் இத்துறையில் மட்டும் தான் வேலைபார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இத்துறை மட்டுமே அனைவரும் வேலை தர காத்திருக்கிறது.
இனி வரும் பத்தாண்டுகளில் ஐ.டி., துறையில் 75 லட்சம் பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அதாவது, ஓராண்டுக்கு 7.5 லட்சம் பணி வாயப்பு, ஆட்கள் தேவைப்படுகின்றனர். இத்துறையில் தற்போது 2.5 லட்சம் பேர் பணியில் உள்ளனர். இந்தாண்டு மட்டும் 2.5 பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், 1.5 லட்சம் பேர் கல்லூரி முடித்து விட்டு வெளியே வந்த புதியவர்கள்.
பஸ் டிக்கெட், அரசு அலுவலகம் என அனைத்து இடங்களும் தற்போது கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களிலும் மென்பொருள் சார்ந்தே பணிகள் நடக்கின்றன. கடந்தாண்டு இப்பணிக்காக மத்திய அரசு 70 ஆயிரம் கோடி செலவழித்துள்ளது; 2011-12ம் ஆண்டில், 90 ஆயிரம் கோடி செலவழிக்க உள்ளது. எனவே, ஐ.டி., துறையை படிப்பது நல்ல தேர்வு; வேலைவாய்ப்பு தயாராக இருக்கிறது. இதற்கு உங்களை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே முக்கியம்.
சராசரியாக மார்க் பெற வேண்டும்; சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர்காணல் 10,15 நிமிடங்கள் தான் நடக்கும். அந்நேரத்தில் உங்களை நீங்கள் எவ்வாறு காட்டிக்கொள்கிறீர்கள் என்பதை சார்ந்தே வேலை கிடைக்கிறது. புதுமையை படைத்தல், தகுதி ஆகியவை நேர்காணலின்போது பரிசோதிக்கப்படுகிறது. இதைத்தவிர்த்து, பொது அறிவு, ஆங்கில அறிவு இருக்க வேண்டும்.
70,80 சதவீத கம்பெனிகள் வெளிநாடுகளுக்கு மென்பொருள் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களாக உள்ளன. ஆங்கில அறிவு என்பது அவசியம். ஐ.டி., துறையில் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இத்துறையை தேர்ந்தெடுத்து ஆழமாக படியுங்கள், என்றார்.
உங்கள் கணணியில் மென்பொருட்கள் எதுவுமின்றி விரும்பத்தகாத தளங்களுக்குச் செல்வதைத் தடுக்க [ Block Any Site In Your Computer ]

இணையத் தொடர்பு உள்ள உங்கள் கணணியில் விரும்பத்தகாதது எனக் கருதப்படும் தளங்களுக்கு சிறுவர்களோ அல்லது உங்கள் ஏனைய உறவினர்கள் அல்லது நண்பர்களோ செல்வதைத் தடுப்பதற்காக மென்பொருட்கள் எவற்றின் உதவியும் இல்லாமல் எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றியதே இன்றைய இடுகையின் நோக்கமாகும்.
இதற்காக நீங்கள் சிறியதொரு செய்கையை மேற்கொண்டால் போதும்.
முதலில் கீழே காட்டப்பட்ட பாதை ஒழுங்கில் “etc“ என்ற இடம்வரை செல்லவும்.
My Computer à C Drive à WINDOWS à system32 à drivers à etc
[ C:\WINDOWS\system32\drivers\ etc ]
இப்போ “etc“ என்றதில் "HOSTS" எனும் ஒரு கோப்பு [file] காணப்படும்.
இதனை Double Click செய்து அல்லது Right Click செய்தோ ஒரு NotePad இல் திறந்துகொள்ளுங்கள்.
இப்போ இவ் NotePad இன் இறுதியில் "127.0.0.1 localhost" என்பது காணப்படும். இதன் கீழே நீங்கள் தடைசெய்ய விரும்பும் தளத்திற்கான முகவரியை 127.0.0.2 என்ற இலக்கத்திற்குப் பின்னால் கொடுக்கவும்.
உதாரணத்திற்கு கீழே பார்க்கவும்.
127.0.0.1 localhost
127.0.0.2 www.blockedsite.com
இவ்வாறே மேலும் பல தளங்களைச் சேர்க்க விரும்பினால் 127.0.0.2 என்ற எண்ணில் உள்ள இறுதி இலக்கத்தை ஒவ்வொன்றாக அதிகரித்து எழுதவேண்டியதுதான்.
உதாரணத்திற்கு கீழே பார்க்கவும்.
127.0.0.1 localhost
127.0.0.2 www.blockedsite01.com
127.0.0.3 www.blockedsite02.com
127.0.0.4 www.blockedsite03.com

பின்னர், “Save” என்பதைக் கொடுத்து அவ் NotePad ஐ சேமித்துக்கொள்க.
இனிமேல் உங்கள் கணணியானது விரும்பத்தகாத இணையத்தளங்களுக்கு செல்வதை தடைசெய்யும்.
No comments:
Post a Comment