சத்தியத்தை முறித்து விட்டால் அதற்கான பரிகாரம் என்ன?
சத்தியத்தின் பரிகாரமாவது, நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு கொடுத்து வரும் ஆகாரத்தில் நடுத்தரமானதை - பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (இதற்கான வசதியை ஒருவன் பெற்றிருக்காவிட்டால், மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்யும்பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும். உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக்காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை உங்களுக்கு இவ்வாறு விளக்குகின்றான். (அல்குர்ஆன்: 5:89)
இந்த மாதம்

கார்ல் மார்க்சு (கார்ல் என்ரிச் மார்க்சு, Karl Heinrich Marx, மே 5, 1818, செர்மனி – மார்ச் 14, 1883, இலண்டன்) செர்மனிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார்.
மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் நிபுணராகவும், தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகவும் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார்.
பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளாரெனினும் இவரது ஆய்வுகளினதும், கருத்துக்களினதும் அடிப்படை, வர்க்க முரண்பாடுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வுசெய்தல் என்பதாகும்.
வரலாற்றில் இன்று
1260 - மங்கோலியப் பேரரசின் மன்னனாக குப்ளாய் கான் முடி சூடினான்.
1762 - ரஷ்யாவும் புரூசியாவும் அமைதி உடன்பாட்டை எட்டின.
1916 - டொமினிக்கன் குடியரசை அமெரிக்க கடற்படையினர் கைப்பற்றினர்.
1925 - தென்னாபிரிக்காவில் ஆபிரிக்கான் மொழி அதிகாரபூர்வ மொழியானது.
1936 - எதியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரை இத்தாலியப் படைகள் கைப்பற்றினர்.
1940 - இரண்டாம் உலகப் போர்: நாடு கடந்த நிலையில் நோர்வேயின் அரசு லண்டனில் அமைக்கப்பட்டது.
1941 - எதியோப்பியாவின் மன்னார் ஹைலி செலாசி அடிஸ் அபாபா திரும்பினார். இந்நாள் அங்கு விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1942 - பிரித்தானியப் படையினர் மடகஸ்காரைத் தாக்கினர்.
1944 - மகாத்மா காந்தி சிறையிலிருந்து விடுதலையானார்.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மன் படைகள் கனடா மற்றும் பிரித்தானியப் படைகளினால் நெதர்லாந்து, டென்மார்க் நாடுகளில் இருந்து விரட்டப்பட்டனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: நாசிகளை எதிர்த்து பிராக் நகரில் கிளர்ச்சி ஆரம்பித்தது.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரியாவின் நாசிகளின் மோதோசென் வதை முகாம் விடுவிக்கப்பட்டது.
1950 - தாய்லாந்தின் ஒன்பதாவது ராமா மன்னராக பூமிபால் அடுள்யாடெ முடி சூடினார்.
1955 - மேற்கு ஜேர்மனி முழுமையான விடுதலை அடைந்தது.
1961 - மேர்க்குரி திட்டம்: அலன் ஷெப்பார்ட் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதரும் முதலாவது அமெரிக்கரும் ஆனார்.
1976 - புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
1980 - ஆறு நாட்களாக தீவிரவாதிகளினால் முற்றுகையிடப்பட்டிருந்த லண்டனின் ஈரானியத் தூதரகத்தின் மீது வான்படையினார் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1981 - ஐரிஷ் புரட்சியாளர் பொபி சான்ட்ஸ் சிறையில் உண்ணாவிரதமிருந்து
இறந்தார்.
2006 - சூடான் அரசுக்கும் சூடான் விடுதலை இராணுவத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
2007 - கென்யாவின் விமானம் ஒன்று கமரூனில் வீழ்ந்ததில் 15 இந்தியர்கள் உட்பட 118 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1818 - கார்ல் மார்க்ஸ், ஜெர்மனிய மெய்யியலாளர் (இ. 1883)
1916 - பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (இ. 1951)
1916 - ஜெயில் சிங், இந்தியாவின் 7வது குடியரசுத் தலைவர் (இ. 1994))
1922 - டி. ஆர். ராஜகுமாரி, தமிழ்த் திரைப்பட நடிகை
1933 - இரத்னசிறி விக்கிரமநாயக்கா, இலங்கையின் 11வது, 14வது பிரதம மந்திரி
இறப்புகள்
1821 - நெப்போலியன் பொனபார்ட், பிரெஞ்சு மன்னன் (பி. 1769)
1948 - புதுமைப்பித்தன், நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி (பி. 1906)
1957 - ஆர். மகாதேவன் (தேவன்), நகைச்சுவை எழுத்தாளர் (பி. 1913)
1981 - பொபி சான்ட்ஸ், ஐரிஷ் புரட்சியாளர் (பி. 1954)
1991 - சிவரமணி, ஈழத்துக் கவிஞை
2006 - நெளஷத் அலி, இந்தித் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1919)
சிறப்பு நாள்
சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள் (International Midwives Day)
அல்பேனியா - மாவீரர் நாள்
டென்மார்க் - விடுதலை நாள் (1945)
எதியோப்பியா - விடுதலை நாள் (1941)
நெதர்லாந்து - விடுதலை நாள் (1945).
தென் கொரியா - சிறுவர் நாள்
உங்களுக்குத் தெரியுமா?
உலங்கெங்கும் 63 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி எண்டோசல்ஃபான் இந்தியாவில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
ஆரோக்கியம்
சத்து நிறைந்த எள்ளின் மருத்துவகுணங்கள்
“இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு
கொளுத்தவனுக்கு கொள்ளைக்கொடு” என்று ஒரு பழமொழி உண்டு.
எள்ளில் உள்ள எண்ணெய் சத்துக்கள் உடல் மெலிவாக இருப்பவர்களை குண்டாக்கும் தன்மையுடையது என்பதற்காகவே இந்த பழமொழி கூறப்படுகிறது.
எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எள்ளின் பயன்பாடு இருந்துள்ளது. எள் வறட்சிப் பகுதியிலும் வளரக் கூடியது. இதை பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர்விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சி தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.
தமிழ்நாட்டு சமையலில் எள்ளிற்கு முக்கிய பங்குண்டு. இதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட எள்ளின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
நடுநிலை கொழுப்புகள் ஃபாஸ்போலிப்பிட்டுகள், ஆர்ஜினைன், சிஸ்டைன், ஹிஸ்டீன், ஐசோலியுசிஸ், லியுசன், லைசின், ஃபோலிக் அமிலம், சுக்ரோஸ், அசிட்டைல்பைரசைன் போன்ற ரசாயனப்பொருட்கள் எள் செடியில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன.
மருத்துவ பயன் உடையவை
விதைகள், இலைகள், வேர் போன்றவை மருத்துவப்பயன் உடையவையாகும்.
கண் நரம்புகள் பலம்படும்
எள் செடியின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும். இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.
பெண்களுக்கு பயன்தரும்
எள் பொடியை உணவில் சேர்த்து உண்டால் மாதவிடாய் இன்மையையும், மாதவிடாய் வலியையும் போக்கும். குழந்தை பெற்ற பெண்கள் உணவுப்பொருட்களில் அதிக அளவில் எள் எண்ணெய் சேர்த்துக்கொண்டால் தளர்ந்த தசைகள் இறுகும். கருப்பைப் புண் குணமடையும்.
விதைகள் நோய் தீர்க்கும். சிறுநீர் கழிவை கூட்டும். கட்டி வீக்கம் ஆகியவற்றை இளக்கும். இளம் பேதி மருந்தாக பயன்படும். மலச்சிக்கல் மற்றும் சீதபேதிக்கு பயன்தரும். வெந்தபுண், ஆவிக்கொப்புளம், சீழ்ப்புண்ணை ஆற்றும். தலைமுடிக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளில் அடிப்படைப் பொருளாக விதை எண்ணெய் பயன்படுகிறது.
எள்ளின் நன்மைகள்
100 கிராம் எள்ளில் 1450 மில்லிகிராம் சுண்ணாம்பு உள்ளது. உடலுக்குத் தேவையான சுண்ணாம்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல் எள்ளில் , தாமிரம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் , துத்தநாகம், வைட்டமின் பி1 , வைட்டமின் இ, ஆரோக்கியமான புரதம் மற்றும் நார்ப்பொருளும் அதிகமாக காணப்படுகின்றன. இதில் உள்ள நன்மையை உணர்ந்தே நம் முன்னோர்கள் உணவுகளில் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் படிப்படியாக அதன் உபயோகம் இப்பொழுது குறைந்து வருகிறது.
தகவல்
கருத்து கணிப்புகள் சரியாகுமா?

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஜெயலலிதா தான் என்று பிரகாஷ்காரத், ஏ.பி.பரதன் போன்ற இடதுசாரி தலைவர்கள் கட்டியம் கூறினர். "மே 15ல், ஜெயலலிதா முதல்வராக முடிசூடுகிறார்' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியன் ஈரோட்டில் பிரகடனம் செய்தார். ஏன்? அடுத்த முதல்வர் ஜெ., தான் என்று கடந்த ஓராண்டு காலமாகவே, ம.தி.மு.க., தலைவர் வைகோவும் முழங்கி வந்தார்.
இத்தகைய அறிவிப்புகள் எல்லாம், அ.தி.மு.க.,வினரை உற்சாகம் கொள்ளச் செய்தன. காங்கிரஸ் கட்சிக்கு, 63 தொகுதிகள் என்று தி.மு.க., அறிவித்தது. காங்கிரஸ் தொண்டர்களை விட, அ.தி.மு.க.,வினர் தான் அதிகம் மகிழ்ந்தனர். பா.ம.க.,விற்கு 30 இடங்கள் என்று செய்தி வந்தது; அந்தக் கட்சி தொண்டர்களை விட, அ.தி.மு.க., தொண்டர்கள் தான் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தாங்கள் சந்திக்க போகும் இந்த எதிர் முகாம்கள் பலவீனமானவை என்பது அவர்கள் கணிப்பு. அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., அங்கம் பெறுவது உறுதி என்ற தகவல் வந்த போது, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டதாகவே ஆர்ப்பரித்தனர். இந்த நிலையில் தான் கருத்து கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. அவைகள் நியாயமான கணிப்புகளும் அல்ல; நேர்மையான தீர்ப்புகளும் அல்ல.
கடந்த 1971ல், சட்டசபை, லோக்சபா தேர்தலில் போது கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. "ராஜாஜியும், காமராஜரும் அமைத்த கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க., கூட்டணி தோல்வியுறும்' என, கணிப்புக்களும், விமர்சனங்களும் வாரி இறைக்கப்பட்டன. ஆனால், மக்கள் எப்படி தீர்ப்பளித்தனர்? தி.மு.க., தமிழகத்தில் அரியணை ஏறியது; மத்தியில் இந்திரா பிரதமரானார். கடந்த லோக்சபா தேர்தலின் போது, டில்லி ஆங்கில தொலைக்காட்சிகளும் ஆங்கில வார ஏடுகளும் எப்படி கணித்தன? அகில இந்திய அளவில், பா.ஜ., ஆட்சி என்றனர். இல்லையேல் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத தொங்கு பார்லிமென்ட் என்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சி முன்பை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி பீடம் ஏறியது. தமிழகத்தில், தி.மு.க., கூட்டணி ஒன்பதே இடங்களில் தான் வெற்றி பெறும். அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தன. தேர்தல் தீர்ப்பு எப்படி அமைந்தது என்பதை அறிவோம். அவர்கள் தங்கள் ஆசைகளை செய்திகளாக்குகின்றனர். தங்கள் விருப்பங்களை கருத்துக் கணிப்புக்களாக கதை புனைகின்றனர்.
பிரபல ஆங்கில வார ஏடும், அதன் தொலைக்காட்சியும் கருத்துக் கணிப்புக்களை வெளியிட்டிருக்கின்றன. அ.தி.மு.க., கூட்டணிக்கு, 50 சதவீத ஓட்டுகளும், 164 தொகுதிகளும் கிடைக்கும். தி.மு.க., கூட்டணிக்கு, 45 சதவீத ஓட்டுகளும், 68 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கின்றன. அ.தி.மு.க., கூட்டணியில் குழப்பங்கள் உருவாவதற்கு முன் இந்த கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டன. இவர்கள் எல்லாம் மக்களிடம் எத்தகைய கேள்விகளை எழுப்பினர்? விலைவாசி உயர்வு, குடும்ப ஆட்சி இந்த பிரச்னைகளில் உங்களை மிகவும் பாதித்தது எது என்ற அளவில் தான் கேள்விகள் கேட்கப்பட்டன. கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டிருக்கின்றவா? அதன் சாதனைகளில் தங்களைக் கவர்ந்தது எது? அந்தச் சாதனைகள் தொடர வேண்டுமா என்ற அளவில் எந்தக் கருத்துக் கணிப்பாளரும் மக்களிடம் கேள்விகள் எழுப்பவில்லை. மக்கள் எப்படி பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினரோ, அதற்கு ஏற்ப கேள்விகளை எழுப்பினர்.
இந்தச் சூழலில் நாம் ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறோம். தமிழக சட்டசபை தொகுதிகளில், 79 தொகுதிகள் நகர்புறத் தொகுதிகள், 164 தொகுதிகள் கிராமப்புறத் தொகுதிகள். தமிழக அரசின் நலத்திட்டங்கள் எட்டாத கிராமங்களே இல்லை. பயன் பெறாத குடும்பங்களே இல்லை. எனவே, எந்த அளவிற்குக் கிராம மக்கள் ஓட்டுச் சாவடிகளுக்கு வருகின்றனரோ, அந்த அளவிற்கு தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு அமையும். காங்கிரஸ் - பா.ம.க., - சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளை, தி.மு.க., விட்டுக் கொடுத்திருக்கிறது. அவைகளில், 70 தொகுதிகளையாவது கைப்பற்ற முடியும் என, அ.தி.மு.க., கணக்கிட்டு சொல்கிறது. இந்த கணக்கின் விடை, 13ம் தேதி தெரிந்து விடும்.

No comments:
Post a Comment